சபரிமலை பற்றி பேஸ்புக் பதிவு ஷேர் செய்த பெண் வேலை நீக்கம்.!
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண், பேஸ்புக் இல் சபரிமலைக்கு தனது யாத்திரையை இன்று துவங்கவுள்ளதாக அறிவித்ததற்கு வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண், பேஸ்புக் இல் சபரிமலைக்கு தனது யாத்திரையை இன்று துவங்கவுள்ளதாக அறிவித்ததற்கு வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று தந்து பேஸ்புக் பக்கத்தில், சபரிமலை நோக்கித் தந்து யாத்திரையைத் துவங்கவுள்ளதாக அறிவித்ததற்கு, அந்த நிறுவனம் அவரைப் பனி நீக்கம் செய்துள்ளது.
சபரிமலைக்குள் பெண்கள் அனுமதிக்க பட கூடாதென்று இருந்த தடையை, உச்ச நீதிமன்றம் அண்மையில் நீக்கியது. இதனைத் தொடர்ந்து பெண்கள் சபரிமலைக்கு தங்களின் பயணத்தை துவங்கியுள்ளனர்.
ஆனால் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேற்று போராட்டக்குழுவினரை கலைக்கத் தடியடி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில் ஒரு பெண் சபரிமலை நோக்கித் தந்து யாத்திரையைத் துவங்க இருப்பதாகச் சொன்னதற்கு வேலை நீக்கம் செய்யப்பட்ட இப்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications