இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க துடிக்கும் அமெரிக்கா.! பின்னணி என்ன தெரியுமா?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியுடன் நாளை அவர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே சுமார் 500 கோடி டாலர் மதிப்புடைய எஸ்-400 ஏவுகணைகள்
இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுடன் இத்தனை நாட்களாக நட்புற பேணும் அமெரிக்கா இந்த முடிவை எடுக்க காரணம் என்ன வென்று அறிய பலருக்கும் ஆர்வம் ஏற்படலாம்.

அமெரிக்காவின் இந்த முடிவால் இந்தியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பொருளாதார தடை விதிக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தவும் முனைப்பு காட்டப்பட்டு வருகின்றது.

ரஷ்ய அதிபர் இந்திய வருகை:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியுடன் நாளை அவர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே சுமார் 500 கோடி டாலர் மதிப்புடைய எஸ்-400 ஏவுகணைகள் ஓப்பந்தம் கையெழுதாக உள்ளது. இது தவிர மேலும் 20 ஒப்பதங்கள் கையெழுத்தாக்கும் என்று கூறப்படுகின்றது.

அமெரிக்கா கடும் எதிர்ப்பு:
ஆனால் ரஷ்யாவிடமிருந்து போர் ஆயுதங்கள் வாங்குதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. அண்மையில் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட சட்டத்திருத்தம் ரஷ்யா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து போர் ஆயுதங்களை வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலக்கும் அதிகாரம் படைத்த டிரம்ப்:
அதிபர் டிரம்ப் மட்டுமே இந்த தடையை நீக்கக் கூடிய அதிகாரம் படைத்தவராக அச்சட்டம் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தடையை விலக்க அதிபர் டிரம்பிடம் கோரிக்கை விடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியா உறுதியான நிலைபாடு:
திட்டமிட்டப்பட்டி ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தத்தை தொடர்வற்கும் இந்தியா உறுதியான நிலைப்பாடு எடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளை மாளிகை விளக்கம்:
இது தொடர்பாக விளக்கம் அளித்த வெள்ளை மாளிகையை சேர்ந்த ஒருவர் இந்தியா மீதான பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

ஒப்பந்தத்தை கைவிட கோரிக்கை:
அமெரிக்காவின் நட்புநாடுகள் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கக் கூடாது என்றும் இந்தியா ஏவுகணை ஒப்பந்தத்தை கைவிடுவதுதான் நல்லது என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications