டிஜிட்டல் இந்தியாவுக்கு வந்த சோதனை: சோழ முத்தா போச்சா.!
மேலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் பொது மக்கள் விரைவாகவும் சுலபமாகவும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட முடிகின்றது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட
டிஜிட்டல் இந்தியாவில் ரூபே கார்டு, யுபிஐயால், விசா, மாஸ்டர் கார்டு உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றது.

மேலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் பொது மக்கள் விரைவாகவும் சுலபமாகவும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட முடிகின்றது.
இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரூபே, யுபிஐ விசா, மாஸ்டர் கார்டுகளின் மார்க்கெட் பங்குகள் இழந்துள்ளது.

விரிவான பணப்பரிவத்தனை:
இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரூபே மற்றும் யூபிஐ உள்ளிட்டவை வங்கிகளுக்குகிடையேயான விரைவான பரிவர்த்தனைகளுக்கு வழி வகுத்திருப்பதாக என்று அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். இதே திட்டங்கள் மேக் ஜின் இந்தியா திட்டத்திலும் வருகின்றது.

சாலை, பள்ளி, மருத்துவமனை மேம்படும்:
ரூபே உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் அதற்காக கட்டணம் இந்தியாவிலேயே தங்கும் என்றும் அதன் மூலம் சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைற்றை மேம்படுத்த முடியும் என்று என்று பிரதமர் மோடி கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார் அருண் ஜேட்லி.

65 சதவீதம் மார்க்கெட்:
இந்தியாவை பொறுத்த வரையில், தற்போது ரூபே, யூ.பி.ஐ. உள்ளிட்டவை 65 சதவீத மார்க்கெட் பங்குகளை பிடித்து இருக்கின்றது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

மார்க்கெட் பங்கு இழப்பு:
இந்நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரூபே கார்டு, யு.பி.ஐ உள்ளிட்டவற்றால், விசா, மாஸ்டர் கார்டு ஆகிவை மார்க்கெட் பங்குகளை இழந்துள்ளதாக நிதியமைச்சர் அருண்ஜேட்லி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கட்டுப்பாடு:
டிஜிட்டல் இந்தியாவு திட்டத்தை முற்றிலும் மத்திய அரசு செயல்படுத்த விரும்புகின்றது. இதற்காவும் மேலும் பல்வேறு வழிகளில் பணம் கொள்ளையடிக்க படுவதை தடுக்கும் விதமாகவும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதை மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதன் மூலம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் படி பணம் இல்லாம பரிவர்த்தனை சிறப்பாக நடக்கவும் ஏதுவாக புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.

மத்திய அரசு:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிதாக பொறுப்பு ஏற்றது. அன்று முதல் பல்வேறு வழிகளில் டிஜிட்டல் இந்தியா திட்டம் படிப்படியாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றது. தற்போது ரயில்வே துவங்கி அனைத்து அரசு துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.

ஏடிஎம் மெஷின்களில் ஸ்கிம்மர்:
ஏடிஎம் மெஷின்களில் ஸ்கிம்மர் உள்ளிட்ட கருவிகளை பொருத்தி அதன் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி அட்டை விவரங்களை திருடி பணத்தை கொள்ளையடிப்பது தொடர்ந்து நடக்கிறது. இது தொடர்பாக வெளிநாட்டினர் உட்பட பலர் கைது செய்யட்டுள்ளனர். நேற்று இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கி ஆலோசனை:
இதுகுறித்து பல்வேறு வங்களிலும் வாடிக்கையாளர்களை காக்கும் விதமாக பல்வேறு கட்ட ஆலேசானை நடத்தினர். மேலும் வங்கியில் பணம் எடுக்கும் முடிவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

மத்திய அரசு அறிவுறுத்தல்:
மேலும் ஏற்கனவே மத்திய அரசு அறிவுறுத்தியபடி தங்கள் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் படி பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற்ற முயற்சிகள் எடுத்துள்ளன. இதன் அடிப்படையில் ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் வதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எஸ்பிஐயில் புதிய கட்டுப்பாடு :
இந்நிலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் இனி ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய உத்தரவு இம்மாதம் 31ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றது.

வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் நிலை:
பாரதா எஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது பணம் எடுக்கம் நிலை குறைக்கப்பட்டுள்ளதாக இனி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications