வில்லன்கள் ஆகும் ரோபோட்கள்.!! மனிதர்களை எச்சரிக்கும் ஆய்வு.!!
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை கண்டு பெருமையடைவோருக்கு பேராபத்து காத்திருக்கின்றது என்கின்றது உலக பொருளாதார மன்றம். ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, 3டி ப்ரின்டிங் போன்ற தொழில்நுட்பங்கள் இன்று அனைத்து வித பயன்பாடுகளை வழங்கும் நிலையில் உலக பொருளாதார மன்றம் அப்படி என்ன தெரிவித்துள்ளது என்பதை ஸ்லைடர்களில் விரிவாக பாருங்கள்..

வேலைவாய்ப்பு
இன்று அனைத்து பணிகளையும் செய்து முடிக்க ரோபோட்கள் பயன்படுத்தப்படுவதால் 2020 ஆம் ஆண்டு வாக்கில் உலகம் முழுக்க பல்லாயிர கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாக உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.

எண்ணிக்கை
இந்த எண்ணிக்கை சுமார் 51,00,000 வரை இருக்கும் என்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

ஆய்வு
இந்த எண்ணிக்கையானது உலகம் முழுக்க நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் கனிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் சுமார் 371 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

பணி
தற்சமயம் நிர்வாக உதவியாளர் சார்ந்த பணிகளை மேற்கொள்வோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மாற்றம்
ரோபோட்டிக் பயன்பாடுகள் இருந்தாலும் 2018 வரை பணியமர்த்தும் முறைகளில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என தெரிவிக்கப்படுள்ளது.

ரோபோட்டிக்ஸ்
இன்று ரோபோட்கள் செய்யும் வேலைகள் உங்களுக்கு நன்மையாக இருந்தாலும் ஒரு நாள் இந்த ரோபோட்கள் உங்களது வேலைக்கும் வேட்டு வைக்கலாம் என்பதே உலக பொருளாதார மன்றம் இந்த ஆய்வின் மூலம் தெரிவிக்கின்றது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications