மீண்டும் ஒரு 'இயந்திர' கொலை, இளம் தொழிலாளி பலி..!
ரோபோட்களுக்கு அளவிற்கு அதிகமான செயற்கை அறிவாற்றல் தர தர, அது ஒருநாள் ரோபோட்கள் மனித இனதிற்கு எதிராக, அல்லது மனிதனை போன்றே சிந்திக்க தொடங்கும் என்று சிலர் அச்சப்பட்டு கொண்டிருக்கும் தருணத்தில் ரோபோட்களால் ஏற்படும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றது.!
ரஷ்ய 'ரோபோட்' ராணுவப்படை, தயார்..!

இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் ஒன்றான 'குர்கவுன்'னில் உள்ள ஒரு மெட்டல் தொழிற்சாலை ஒன்றில் பணியின் போது, இயந்திர ரோபோட் ஒன்றால் 24 வயது நிரம்பிய தொழிலாளி ஒருவரை மரணம் அடைந்துள்ளார்.
மனித இனத்தை எதிர்க்கும் ரோபோட்கள்..?!

24 வயது நிரம்பிய தொழிலாளியான ராம்ஜி லால் என்பவர், எஸ்கேஎச் (SKH) மெட்டல் நிறுவனத்தில், ரோபோட்கள் இயங்கும் பகுதிகளில் தன் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருக்கும் போது, பதிவு செய்தபடி இயங்கும் ரோபோட் ஒன்று, ராம்ஜி லாலை துளையிட்டு கொன்றதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் ராம்ஜியை ரோபோட் கொல்லவில்லை, மின்சாரம் தாக்கி தான் அவர் உயிரிழந்தார் என்றும் கூறுகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் ஜெர்மனியில் உள்ள கார் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிலும் இது போன்ற ஒரு ரோபோட் கொலை நடந்தது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்த ரோபோட்..!

பதிவு செய்யப்பட்டபடி தானாக வேலைகளை செய்யும் ரோபோட்கள் பயன்படுத்தபடும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகும் நிலையில், இது போன்ற இயந்திர கொலைகள், ரோபோட்கள் மீதான அச்சத்தினை அதிகப்படுத்திக் கொண்டேதான் போகின்றன..!


Click it and Unblock the Notifications