Home
News

RBI அதிரடி: ஏடிஎம் செல்லும் மக்கள் கவனிக்கவும்.. ATMல் பணம் இல்லையென்றால் ரூ.10000 அபராதம்.!யாருக்கு தெரியுமா?

ATM அட்டை பயனர்களுக்கு இந்த மாத துவக்கத்தில் இருந்து புதிய கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வங்கிகளுக்கும் சில புதிய விதிகளை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தற்பொழுது வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான அறிவிப்பின் படி, இனிமேல் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லையென்றால், அந்த ATM மையத்தின் வங்கிகளுக்குக் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்று RBI அதிரடியாக அறிவித்துள்ளது.

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய அதிரடி விதி

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய அதிரடி விதி

இந்த புதிய விதி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ள இந்த புதிய அறிவிப்பிற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மக்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கச் செல்லும் போது ஏடிஎம்-ல் பணம் வரவில்லை என்றால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுகிறீர்கள். பின்பு 100 ரூபாய் நோட்டுகள் கிடைப்பது கூட தற்பொழுது கடினமாக தான் இருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவு

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவு

இந்த சிக்கலில் இருந்து மக்களை விடுவிக்க வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி தற்பொழுது களமிறக்கியுள்ளது.இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால், மக்கள் பயன்டுத்தும் ஏஎடிம் இயந்திரங்களில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பணமில்லாமல் இருந்தால், இனி அந்த வங்கிகளின் மீது அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ATM மையங்களில் பணம் இருப்பதில்லை

ATM மையங்களில் பணம் இருப்பதில்லை

அதேபோல், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் ஏடிஎம் இயந்திரங்களில் பல நாட்கள் பணம் இல்லாமல் இருக்கிறது என்று அடிக்கடி புகார்கள் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இப்போதும் கூட மக்கள் ஒரு சிறிய தொகையை எடுக்கக்கூட வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது, இன்னும் சில ATM மையங்களில் பணம் இருப்பதில்லை. இதனால், பொது மக்கள் சில சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

10 மணி நேரத்திற்கு மேலாக பணம் இல்லையா? அப்போ இனி அபராதம் தான்

10 மணி நேரத்திற்கு மேலாக பணம் இல்லையா? அப்போ இனி அபராதம் தான்

இனி ஒரு ATM மையத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக பணம் கிடைக்காவிட்டால், அந்த வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஏற்ப வித்தியாசமாக இருக்கும் என்று RBI மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சரி , இதுயெல்லாம் கேட்க நன்றாக தான் இருக்கிறது. வங்கிகள் ஒரு நகரத்தில் ஏராளமான ATM மையங்களை வைத்துள்ளன, இதில் எந்த ஏஎடிம்களில் பணம் தீரப்போகிறது என்பதை வங்கிகள் அரிய வாய்ப்புள்ளதா என்று சிலருக்கு சந்தேகங்கள் எழுந்திருக்க வாய்ப்பு உள்ளது.

TM இயந்திரத்தில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை வங்கிகள்எப்படி அறிய முடியும்?

TM இயந்திரத்தில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை வங்கிகள்எப்படி அறிய முடியும்?

அதற்கான விடை என்ன என்பதை இப்போது பார்க்கலாம். செயல்பாட்டில் உள்ள ATM இயந்திரங்களில், பணத்தின் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய சில சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாக இருக்கலாம்.இந்த சென்சார்கள் மூலம், அந்த ATM இயந்திரத்தில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை வங்கிகள் நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்க முடியும்.

ATM இல் இனி பணம் உடனுக்குடன் நிரப்பப்படவேண்டும்

ATM இல் இனி பணம் உடனுக்குடன் நிரப்பப்படவேண்டும்

இந்த தகவல்கள் மூலம் ஏடிஎம்மில் எவ்வளவு பணம் உள்ளது, அது எவ்வளவு நேரத்தில் முடிந்துபோக வாய்ப்புள்ளது, சராசரியாக எவ்வளவு நேரத்தில் வங்கி மீண்டும் பணத்தை அந்த ATM இல் நிரப்ப வேண்டும் என்பது போன்ற தகவல்கள் எல்லாம் வங்கிகளுடன் நேரடியாக பகிரப்படுகிறது. இந்த தகவலை கொண்டு, வங்கிகள் அதன் ஏஎடிம் இயந்திரங்களில் பணத்தை நிரப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தகவல்கள் எல்லாம் வங்கிகளிடம் இருந்தும் ATM மையங்களில் பணம் இருப்பதில்லை.

இனி பொதுமக்களுக்கு பணம் எடுப்பதில் சிரமம் இருக்காது

இனி பொதுமக்களுக்கு பணம் எடுப்பதில் சிரமம் இருக்காது

இனி ATM இயந்திரங்களில் எப்போதும் பணம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய விதி செயல்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிரடி நடவடிக்கையின் படி, இனி தொடா்ந்து 10 மணி நேரத்துக்கு மேல் ATM இயந்திரத்தில் பணம் இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இனி பொதுமக்களுக்கு பணம் எடுப்பதில் சிரமம் இருக்காது என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Reserve Bank Of India To Penalize Banks For Non Availability Of Cash In ATMs From October 1st : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X