கம்ப்யூட்டரை குளிர்விக்க 'மணலை' பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் விருப்பம்..!
கம்ப்யூட்டர் வைத்திருப்பவருக்கு மட்டும் தான் அவைகள் செய்யும் 'மக்கர்'கள் பற்றி தெரியும். முக்கியமாக கம்ப்யூட்டர் சூடாகும் பிரச்சனை. இதற்கு ஒரு தீர்வே இல்லையா என்று பொதுவான கம்ப்யூட்டர் பயனாளிகள் பல வகையான வழிகளை தேடும் அதே சமயம் ஆராய்ச்சியாளர்களும் அதற்கான சரியான தீர்வை தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்..!
அப்படியான தேடலில், ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு கணினிகளின் உள்ளே மணலை வைக்க விரும்புகிறார்கள்..!

உயர் மின்கடத்தா நிலை :
மணல் என்றதும் கடல் மணல் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அதாவது, உயர் மின்கடத்தா நிலையான பாலிமர் பூசப்பட்ட சிலிக்கான் டை ஆக்சைடு நானோ துகள்கள்.!

மேம்பட்ட குளிர்ச்சி :
இதன் மூலம் மலிவான விலையில் பெருகிய முறையில் அதிக அளவிலான செயல்பாடு கொண்ட மின்னணு சாதனங்களுக்கு மேம்பட்ட குளிர்ச்சி வழங்க முடியும்.

மேற்பரப்பு பண்புகள் :
சிலிக்கான் டை ஆக்சைடு ஆனது தானாகவே குளிர்ச்சிஅடைந்து கொள்ளாது அதற்கு பதிலாக நானோ அளவு பொருகளினால் பூச்சுப் பெற்ற தனிப்பட்ட மேற்பரப்பு பண்புகள் ஆனது வெப்ப மூழ்கி பொருட்களாக செயல்படும்.

பரிசோதனை :
இந்த நிகழ்விற்கு பின்னால் மிகவும் சிக்கலான இயற்பியல் கோட்பாட்டு உள்ளதென்பதும் நானோ துகள் படுக்கையானது ஒரு மின்கடத்தியாய் பரிசோதனை செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜர்னல் மெட்டீரியல்ஸ் ஹாரிசான் :
இந்த ஆய்வு சார்ந்த விடயங்கள் மெட்டீரியல்ஸ் ஹாரிசான் ( journal Materials Horizons) இதழில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :
டிஜிட்டல் கேமிராவை ஓரங்கட்டும் 'சூப்பர் 8' மொபைல் போட்டோகிராஃபி டிப்ஸ்..!
தொடு திரை தொல்லை பண்ணுதா, அப்ப இதைப் பண்ணுங்க.!!
வரிசையாய் குறையும் மொபைல் இண்டர்நெட் விலை : அலற வைக்கும் உண்மை பின்னணி.??

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications