செயற்கை இலை : சூரிய ஒளி + கார்பன் டை ஆக்சைடு = எரிபொருள்..!
சூரிய ஒளி பயன்படுத்தி வளிமண்டலத்தில் கிடைக்கக்கூடிய கரியமில வாயுவை நேரடியாகவும், மலிவாகவும் , அதே சமயம் மிகத்திறமையான முறையில் பொருந்தக்கூடிய ஹைட்ரோகார்பன் எரிபொருளாக மாற்றும் செயற்கை இலையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

பழமையான சூரிய மின்கலங்கள் மூலம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றி கனரக பேட்டரிகள் அடைத்து வைப்பது போலல்லாமல் இந்த புதிய சாதனம் அடிப்படையில் தாவரங்கள் மூலம் வேலை செய்கிறது, வளிமண்டலத்தில் கரியமில வாயுவை எரிபொருளாக மாற்றி ஒரே நேரத்தில் இரண்டு முக்கியமான பிரச்சினைகளை தீர்க்கிறது.

அதவாது சூரிய பண்ணையான "செயற்கை இலைகள்" வளிமண்டலத்தில் இருந்து கரியமில வாயுக்களை கணிசமான அளவு நீக்கவும் அதே சமயம் திறமையான சக்தி நிறைந்த எரிபொருள் தயாரிக்கவும் செய்கிறது.

இந்த புதிய சூரிய மின்கலம் என்பது ஒளிச்சேர்க்கை (photosynthetic) தானே தவிர ஒளி மின்னழுத்தம் (photovoltaic) அல்ல என்பதும், சூரிய ஒளி பயன்படுத்தி சக்தி உருவாக்க செயல்முறையான படிம எரிபொருட்களில் இருந்து பசுமைகுடில் வாயுக்களை உருவாக்கும் முறை இனி கைவசம் இல்லாமல் வளிமண்டலத்தில் கரியமில வாயுக்களை மறுசுழற்சி செய்து சூரிய ஒளி பயன்படுத்தி எரிபொருள் உருவாக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க :
இனி 3டி கண்ணாடி இல்லாமல் 3டி திரைப்படம் பார்க்கலாம்..!
"மெய்யான அதிசயம்" : அழுக்கு நீரை குடிநீராய் மாற்ற முடியும்..!
கூடும் இந்திய பலம் : 50-70 கிமீ வரை பாய்ந்து பறந்தடிக்கும் பராக்-8..!


Click it and Unblock the Notifications