Home
News

அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான் ரெடி: கையில் ரூ.500/-ஐ வைத்துக்கொண்டு ரெடியாக இருங்க.!

ஜியோபைபர் திட்டங்கள் கசிவது ஒன்றும் முதல் முறையல்ல, முன்னதாகவே கசிந்துள்ளன., ஆனால் இவைகளை இறுதி திட்டங்களாக கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, குறைந்த செலவிலான அல்லது அறிமுகத்தை முன்னிட்டு முற்றிலும் இலவசமான அதன் ஃபைபர் பிராட்பேண்ட் நெட்வொர்க் ஆன ஜியோஃபைபர் திட்டத்தை தொடங்கும் அந்த நாள் முதல் - இந்தியாவில் டேட்டா நுகரப்படும் வழிமுறையே மாற்றியமைக்கப்படும் என்பதில் சந்தேகமேயில்லை. அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை தான்.

மாஸ்டர் பிளான் ரெடி: கையில் ரூ.500/-ஐ வைத்துக்கொண்டு ரெடியாக இருங்க.!

நுழைவிலேயே இந்திய டெலிகாம் துறைக்குள் புரட்சியை உண்டாக்கிய ஜியோவானது, அதன் அறிமுகத்தின் போது தொடர்ச்சியாக ஆறு மாத காலத்திற்க்கு இலவச 4ஜி சேவையை வழங்கி மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது. உடன் அந்த காலகட்டத்தில் 1ஜிபி அளவிலான டேட்டாவை பயன்படுத்தும் பழக்கத்தையும் ஜியோ திணித்தது.

மீண்டும் திணிக்க முகேஷ் அம்பானி தலைமையிலான குழு திட்டமிட்டுள்ளது

மீண்டும் திணிக்க முகேஷ் அம்பானி தலைமையிலான குழு திட்டமிட்டுள்ளது

அதேபோன்றதொரு டேட்டா நுகரும் பழக்கத்தை - வேறொரு பாணியில், இன்னும் பரந்த நிலைப்பாட்டில் - மீண்டும் திணிக்க முகேஷ் அம்பானி தலைமையிலான குழு திட்டமிட்டுள்ளது. ஆம், 4ஜி கட்டண திட்டங்களை அறிமுகம் செய்து, திருத்தி அமைத்து ஜியோவிற்கு 'போர்' அடித்து விட்டது போலும்.

'தன்னை' பின்பற்ற வைக்கும்

'தன்னை' பின்பற்ற வைக்கும்

அறிமுகமாவுள்ளது ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையான ஜியோபைபர் (JioFiber) 4ஜி சேவையை போலவே துவக்கத்திலேயே பார்தி ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற பிராட்பேண்ட் சேவையை இடையூறு செய்யும், பின்னர் ஒட்டுமொத்த பிராட்பேண்ட் துறையையும் 'தன்னை' பின்பற்ற வைக்கும்.

அதிவேக பிராட்பேண்ட் சேவை

அதிவேக பிராட்பேண்ட் சேவை

வெளியான தகவலின்படி ஜியோபைபர் ஆனது அதிவேக தரவை, அதாவது 1ஜிபிபிஎஸ் வரையிலான தரவு வேகத்துடன் கூடிய அதிவேக பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும். இருப்பினும், இந்த சேவையின் அதிகாரப்பூர்வ தொடக்க தேதி இன்னமும் தெரியவில்லை.

ஜியோபைபர் சேவைகளுக்கான சோதனை

ஜியோபைபர் சேவைகளுக்கான சோதனை

ஆனால் ஜியோபைபர் சேவையானது இந்த காலாண்டின் இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்பதை வெளியான எல்லா அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. ஜியோ ஏற்கனவே அதன் ஜியோபைபர் சேவைகளுக்கான சோதனையை 10 நகரங்களில் - மும்பை, டெல்லி என்.சி.ஆர், அஹமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நிகழ்த்தி வருகிறது.

ஜியோபைபர் ப்ரீவியூ ஆபர் பற்றிய விவரம் வெளியானது

ஜியோபைபர் ப்ரீவியூ ஆபர் பற்றிய விவரம் வெளியானது

சமீபத்தில் ஹைதராபாத்திலும் கூட, இந்த சோதனை நடப்பதாக அறியப்பட்டது. அங்கு தான் ஜியோபைபர் ப்ரீவியூ ஆபர் பற்றிய விவரம் வெளியானது. அந்த சலுகையானது, பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 100ஜிபி அளவிலான இலவச தரவுகளை அனுபவிக்க உதவும்.

மூன்று மாதம் என்கிற இலவச சேவையானது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது

மூன்று மாதம் என்கிற இலவச சேவையானது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது

இன்றோ, நாளையோ கூட ஜியோபைபர் அறிமுகமானாலும் கூட, முதல் மூன்று ம்,மாதங்களுக்கான இலவச பிராட்பேண்ட் சேவை கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.அதை ஜியோவும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இன்னும் கூடுதல் சுவாரசியம் என்னவனில், அறிமுகத்திற்கு பின்னர் மூன்று மாதம் என்கிற இலவச சேவையானது நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

600 ஜிபி அளவிலான டேட்டா ரூ.500/-க்கு

600 ஜிபி அளவிலான டேட்டா ரூ.500/-க்கு

குறிப்பிட்ட இலவச சலுகை காலம் காலம் முடிவடைந்தவுடன் கட்டண சேவை தொடங்கும். அந்த சேவையின் கீழ் 600 ஜிபி அளவிலான டேட்டா ரூ.500/-க்கும் மற்றும் 1000 ஜிபி அளவிலான டேட்டா ரூ.2000/-க்கும் கிடைக்குமெநிக்கிறது சமீபத்தில் வெளியானதொரு அறிக்கை.

இன்னும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

இன்னும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

ஜியோபைபர் திட்டங்கள் கசிவது ஒன்றும் முதல் முறையல்ல, முன்னதாகவே கசிந்துள்ளன., ஆனால் இவைகளை இறுதி திட்டங்களாக கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சற்று கூடுதல் விலை நிர்ணயம் பெறலாம் அல்லது இன்னும் மலிவாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

டிவி சேவையையும் பிராட்பேண்ட் தொகுப்புடன் இணைத்தே வழங்க திட்டமிட்டுள்ளது.

டிவி சேவையையும் பிராட்பேண்ட் தொகுப்புடன் இணைத்தே வழங்க திட்டமிட்டுள்ளது.

ஆனால் மிக நிச்சயாமாக தற்போது சந்தையில் கிடைக்கும் பிராண்ட்பேண்ட் சேவைகளை விட மிக குறைவான விலையில், அதிக அளவிலான தரவு விகிதங்கள் கொண்டிருக்கும். கூடுதலாக, ரிலையன்ஸ் ஜியோ அதன் டிவி சேவையையும் பிராட்பேண்ட் தொகுப்புடன் இணைத்தே வழங்க திட்டமிட்டுள்ளது.

தனித்தனியாக கட்டணம் செலுத்த அவசியம் இருக்காது.

தனித்தனியாக கட்டணம் செலுத்த அவசியம் இருக்காது.

அதாவது ஒற்றை இணைப்பு வழியாக பிராட்பேண்ட் மற்றும் இண்டர்நெட் தொலைக்காட்சி இணைப்பு ஆகியவற்றை வழங்க திட்டமிட்டுள்ளது. இது சாத்தியமானால் உங்கள் லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் கேபிள் டிவி இணைப்பு ஆகியவற்றிற்கு தனித்தனியாக கட்டணம் செலுத்த அவசியம் இருக்காது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
டேட்டா நன்மையுடன் சேர்த்து

டேட்டா நன்மையுடன் சேர்த்து

ஆக ஜியோ பிராண்ட்பேண்ட் ஆனது உங்களுக்கு டேட்டா நன்மையுடன் சேர்த்து ஒரு நிலையான குரல் அழைப்பு நன்மை, ஊடக பகிர்வு, லைவ் மற்றும் கேட்ச் அப் டிவி, ஹோம் ஆட்டோமெட்டேஷன், சர்வைலன்ஸ் மற்றும் கேமிங் ஆகிய ஒருங்கிணைந்த சேவைகள் ஒன்றாக கிடைக்கும். மேலும் பல ஜியோபைபர் பற்றிய தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

ஜியோ அதிரடி: ரூ.399/- ரீசார்ஜ் செய்தால் ரூ.799/- கிடைக்கும்; இதை பெறுவது எப்படி.?

ஜியோ அதிரடி: ரூ.399/- ரீசார்ஜ் செய்தால் ரூ.799/- கிடைக்கும்; இதை பெறுவது எப்படி.?

முடிந்த அளவிலான காம்போ (வாய்ஸ் + டேட்டா) நன்மைகளை வழங்கிய முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் மற்றும் ங்அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகியவைகள் ஜியோவைப்போன்றே பெரும்பாலான திட்டங்களில் நன்மைகளை வழங்கிவருவதால் ஜியோ அதற்கும் ஒருபடி மேல் சென்று கேஷ்பேக் சலுகைகளை வழங்கி வருகிறது.

பெறுவது எப்படி.?

பெறுவது எப்படி.?

அப்படியாக ஜியோப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் புதிய கேஷ்பேக் வாய்ப்பானது நம்பமுடியாத வண்ணம் 200% அளவிலான பணத்தை திருப்பி தருகிறது. இந்த கேஷ்பேக் வாய்ப்பை பெறுவது எப்படி.? என்பதை விரிவாக காண்போம்.!

குறைந்தபட்ச ரீசார்ஜ் மதிப்பில்

குறைந்தபட்ச ரீசார்ஜ் மதிப்பில்

இந்த 200% அளவிலான கேஷ்பேக் வாய்ப்பானது ரூ.399/- அல்லது அதற்கும் மேலான ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதை நிகழ்த்துவதின் மூலம் நீங்கள் ரூ.799/- வரையிலான லாபத்தை பெறலாம். சுருக்கமாக சொன்னால் ஜியோ நிறுவனமானது 200% நன்மைகளை குறைந்தபட்ச ரீசார்ஜ் மதிப்பில் வழங்குகின்றது.

முதலில் 100% கேஷ்பேக்

முதலில் 100% கேஷ்பேக்

இந்த வாய்ப்பைப் பற்றி பேசுகையில், உங்கள் ஜியோ எண்ணில் இருந்து ரூ.399/- என்கிற குறைந்தபட்ச ரீசார்ஜை நிகழ்த்தினால் ரூ.50/- மதிப்பிலான எட்டு ரீசார்ஜ் வவுச்சர்கள் உங்களுக்கு கிடைக்கும். அதாவது மொத்தம் ரூ.400/- மதிப்பிலான 100% கேஷ்பேக்கை முதலில் பெறுவீர்கள்.

ஒரு வவுச்சரைப் பயன்படுத்தி ரூ.50/-ஐ தள்ளுபடி

ஒரு வவுச்சரைப் பயன்படுத்தி ரூ.50/-ஐ தள்ளுபடி

ஜியோவில் இருந்து எதிர்கால ரீசார்ஜ்களை நிகழ்த்தும் போது, உங்களுக்கு கிடைக்கும் கெஸ்பேக் ரீசார்ஜ் வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். எளிமையான சொற்களில் உங்களின் அடுத்த ரீசார்ஜ்ஜில் ரூ.50/- மதிப்பிலான ஒரு வவுச்சரைப் பயன்படுத்தி ரூ.50/-ஐ தள்ளுபடியாக பெறலாம்.

மொபிவிக், பேடிஎம், அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி

மொபிவிக், பேடிஎம், அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி

ரூ.799/- என்கிற கேஷ்பேக்கில் ரூ.400/- இப்படி கழிய, மீதமுள்ள ரூ.399/- ஆனது வாடிக்கையாளர்களுக்கு மொபிவிக், பேடிஎம், அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவைகளின் வேலட்களின் வழியாக, வேறுபட்ட மதிப்புக்கான கேஷ்பேக் வாய்ப்புகளாக கிடைக்கும்.

ரூ.2500/- மதிப்பிலான ஹோட்டல் வவுச்சரை பெறுவீர்கள்.

ரூ.2500/- மதிப்பிலான ஹோட்டல் வவுச்சரை பெறுவீர்கள்.

நீங்கள் மொபிவிக் வழியாக ரூ.399/- ரீசார்ஜ் செய்தால் ரூ.2500/- மதிப்பிலான ஹோட்டல் வவுச்சரை பெறுவீர்கள். பேடிஎம் வழியாக பணம் செலுத்துகிறீர்கள் என்றால் அதன் பின் நிகழ்த்தும் முதல் முறை திரைப்பட டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரூ.150/- சலுகை கிடைக்கும் அதாவது 50% கேஷ்பேக் கிடைக்கும்.

ரூ.75, ரூ.50. ரூ.50/- மற்றும் ரூ100/- கேஷ்பேக்

ரூ.75, ரூ.50. ரூ.50/- மற்றும் ரூ100/- கேஷ்பேக்

ஜியோ வழங்கும் இந்த 200% வாய்ப்பானது கடந்த பிப்ரவரி 1, 2018 தொடங்கி பிப்ரவரி 15, 2018 வரை மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவைகளை பொறுத்தமட்டில் புதிய ரீசார்ஜ் பயனர்களுக்கு முறையே ரூ.75, ரூ.50. ரூ.50/- மற்றும் ரூ100/- கேஷ்பேக்கும், ஏற்கனவே இருக்கும் பயனர்களுக்கு முறையே ரூ.30, ரூ.50. ரூ.30/- மற்றும் ரூ.30/- என்கிற கேஷ்பேக்கும் கிடைக்கும்.

இது நான்காவது கேஷ்பேக் வாய்ப்பாகும்

இது நான்காவது கேஷ்பேக் வாய்ப்பாகும்

கடந்த அக்டோபர் முதல் ஜியோ அதன் பிரதம உறுப்பினர்களுக்கு கேஷ்பேக் வாய்ப்புகளை தொடர்ச்சியான முறையின்கீழ் வழங்கி வருகிறது என்பதும் இந்த 200% கேஷ்பேக் ஆனது நிறுவனத்தின் நான்காவது கேஷ்பேக் வாய்ப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

கற்பனைக்கு எட்டாத திருத்தம்: இனி 4ஜிபி/நாள் வழங்கும் ஜியோ.!

கற்பனைக்கு எட்டாத திருத்தம்: இனி 4ஜிபி/நாள் வழங்கும் ஜியோ.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் திருத்தப்பட்ட குடியரசு தின 2018 திட்டங்களானது அதன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க தொடங்கியுள்ள நிலைபப்பாட்டில் மேலுமொரு இன்ப அதிர்ச்சியை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மூலம்: டெலிகாம்டால்க்.இன்ஃபோ

மூலம்: டெலிகாம்டால்க்.இன்ஃபோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மேலும் இரண்டு பிரதான திட்டங்களானது திருத்தத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன. அதாவது ரூ.509/- மற்றும் ரூ.299/- ஆகிய இரண்டு திட்டங்களும் அதிரடியான திருத்தத்தை பெற்றுள்ளது. அதென்ன திருத்தம்.? இனி இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன.? உடன் இந்த திட்டங்களின் முந்தைய நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

ரூ.509/- திட்டமானது இனி

ரூ.509/- திட்டமானது இனி

திருத்தம் கண்டுள்ள ரூ.509/- திட்டமானது இனி நாள் ஒன்றிற்கு 4ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். மறுகையில் உள்ள ரூ.299/- ஆனது ரீசார்ஜ் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான தரவை வழங்கும்.

56ஜிபி டேட்டாவில் இருந்து 84ஜிபி

56ஜிபி டேட்டாவில் இருந்து 84ஜிபி

ஆனால் இன்று முதல் ஜியோ ரூ.299/- ஆனது அதே 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம், நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான அதிவேக தரவை வழங்கும். ஆக இதன் மொத்த தரவு நன்மையானது 56ஜிபி டேட்டாவில் இருந்து 84ஜிபி டேட்டாவாக மாறியுள்ளது.

ரூ.299/- திட்டமானது தரவு

ரூ.299/- திட்டமானது தரவு

நன்மைகளுடன் சேர்த்து ஜியோ ரூ.299/- திட்டமானது, அதன் செல்லுபடியாகும் காலம் வரையிலான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.

"கற்பனைக்கு எட்டாத" 4ஜிபி

மற்றொரு திருத்தப்பட்ட திட்டமான ரிலையன்ஸ் ஜியோ ரூ.509/- இனி 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு "கற்பனைக்கு எட்டாத" 4ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது. ஆக இதன் ஒட்டுமொத்த டேட்டா நன்மையானது இனி 112 ஜிபி ஆகும்.

வரம்பற்ற குரல் அழைப்புகள்

வரம்பற்ற குரல் அழைப்புகள்

ஜியோ ரூ.299/- திட்டத்தை போலவே தரவு நன்மைகளுடன் சேர்த்து ஜியோ ரூ.509/- திட்டமானது, அதன் செல்லுபடியாகும் காலம் வரையிலான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

மூலம் : டெலிகாம்இன்ஃபோ.காம்

Best Mobiles in India

English summary
Reliance JioFiber Launch is Around the Corner, Expected to Offer Free Broadband Services With 100 Mbps Speed Initially. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X