ஜியோ நிறுவனத்தின் VoWi-Fi சேவை இந்த மூன்று மாநிலங்களில் தொடக்கம்.!
ஜியோ நிறுவனம் அன்மையில் பல்வேறு புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. மேலும் இந்தியாவில் 5ஜி சேவை வெளியிடுவதற்கு முன்பே டெலிகாம் ஆபரேட்டர்களிடமிருந்து மற்றொரு காலிங் மற்றும் நெட்வொர்க் தொழில்நுட்பமானது அறிமுகமாகியுள்ளது.

வைஃபை காலிங்
அது என்னவென்றால் வாய்ஸ் ஓவர் வைஃபை ஆகும், இது எளிமையாக அனைவருக்கும் தெரியும்படி கூறவேண்டும் என்றால் வைஃபை
காலிங் என்று அழைக்கலாம். குறிப்பாக இந்த வாய்ஸ் ஓவர் வைஃபை என்பது செல்லுலார் இணைப்பு இல்லாத சூழ்நிலைகளில்
சிக்கியுள்ள பயனர்களுகக்கு கண்டிப்பாக உதவுக்கூடிய ஒரு தொழில்நுட்பம் ஆகும்.

கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கொல்கத்தா
ஜியோ நிறுவனம் தற்சமயம் இந்த VoWi-Fi சேவையை கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கொல்கத்தா ஆகிய மூகன்று வட்டங்களில் தொடங்கியுள்ளது என டெலிகாம்டாக் வலைதள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சேவை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

மோசமான சூழ்நிலை
வாய்ஸ் ஓவர் வைஃபை அதாவது மோசமான சூழ்நிலைகளில் சிக்கிய வாடிக்கையாளர்களுக்கு இந்த வைஃபை இணைப்பு இருந்தால், அவர்கள் வாய்ஸ் ஓவர் வைஃபை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடியும்.

குறிப்பாக ஒரு சில டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே இந்த VoWiFi தொழில்நுட்பமானது அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் விங்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் அதன் சில
புதிய பிராந்தியங்களில் இந்த vowifi சேவையை சோதிப்பதாக டெலிகாம்டால்க் வலைதளம் வெளிப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் பிராட்பேண்ட் பயனர்களுக்கு மட்டுமே தற்போது கிடைக்கும் ஏர்டெல் வைஃபை அழைப்பு சேவையுடன் ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் ஜியோ VoWi-Fi சேவை எந்தவொரு பிராட்பேண்ட் ஆபரேட்டரிலும் செயல்படுகிறது.

ஆனால் ஜியோ நிறுவனம் கொண்டுவந்த இந்த சேவை பொருந்தக்கூடிய சாதனங்களின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் இந்த சேவையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications