ஜியோ வெல்கம் ஆஃபர் மார்ச் 2017 வரை நீட்டிக்காது..!?
டிசம்பர் இறுதி வரை ஜியோ வழங்கும் அதன் வரம்பற்ற சேவைகள் டிசம்பர் மதத்தோடு முடிவுக்கு வரலாம்.
ரிலையன்ஸ் ஜியோ மிக சமீபத்தில் தன் பயனர்களுக்கு அறிமுக சலுகையின் கீழ் வழங்கிய அதன் வரம்பற்ற இணைய உலாவுதல் மற்றும் குரல் அழைப்புகளை டிசம்பர் மாத இறுதியோடு அல்லாது மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம் என்று அறிவித்திருந்தது.
ரிலையன்ஸ் நிறுவனம் ட்ராய் உடன் பல சந்திப்புகளை நடத்தி வருகிறது மற்றும் மற்ற நெட்வொர்க்குகளுடன் ஒத்துழைத்து பிணைய மேம்பாடுகளையும் நிகழ்த்தி வருகிறது. எனினும், தொலை தொடர்பு ஆப்ரேட்டர் அதன் சேவையை நீட்டிக்க முக்கிய காரணம் ஜியோ கால் ட்ராப் சிக்கல் தான்,அதனால் தான் மார்ச் 2017 வரை சலுகை நீட்டிக்கப்படும் என அறிவித்தது.

இலக்கை அடைய முடியும்
இந்நிலையில் தொலை தொடர்பு ஆப்ரேட்டர் அதன் பிணைய தரத்தை மேம்படுத்திவிட்டால் குறிப்பாக கால் ட்ராப் பிரச்சினைகள் குறைக்க தேவையான அனைத்து முயற்சிகள் எடுத்து அதன் இலக்கை அடைய முடியும் என்ற நிலையில் ஜியோ பயனர்கள் டிசம்பர் வரை மட்டுமே வரம்பற்ற சேவையை பயன்படுத்த முடியும் சலுகைகள் மார்ச் வரை நீடிக்கப்படாது.

ஜியோ -ஏர்டெல்
ரிலையன்ஸ் ஜியோ வலைத்தளத்தில் காட்டப்படும் நவம்பர் அறிக்கையின்படி தொலை தொடர்பு ஆப்ரேட்டர் 28% கால் ட்ராப் விகிதத்தை குறைத்துள்ளது. மேலும் இந்த இந்த அறிக்கை ஜியோ-வோடபோன் மற்றும் ஐடியா குறைந்தபட்ச கால் ட்ராப்களையும், ஜியோ -ஏர்டெல் அதிகபட்ச அழைப்பு தோல்விகளையும் சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.

30 நிமிடங்கள் மட்டுமே
ரிலையன்ஸ் ஜியோ அதன் இலவச அழைப்புகளை 30 நிமிடங்கள் மட்டுமே என்று வரையறுத்து விட்டதென்ற சமீபத்திய செய்தி ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது. முன்னர் பல மணி நேரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்ட அழைப்புகள் இப்போது குறைக்கப்படும் என்ற செய்தியானது ஜியோ அழைப்பு சிக்கல் சார்ந்த விடயத்தில் தீவிரமாய் பணியாற்றுவதை நிரூபிக்கிறது எனினும் இந்த 30 நிமிடங்கள் இலவச அழைப்பு மட்டுமே என்ற அதிகாரப்கபூர்வ அறிக்கைகளும் இல்லை
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வேலையை தொடர்கிறது
ஏர்டெல் வழங்கிய 17,000 இணைப்பு புள்ளிகளுடன் சேர்த்து வோடபோன் மற்றும் ஐடியா வழங்கிய கூடுதல் இணைப்பு புள்ளிகளை கொண்டே ஜியோ அதன் கால் ட்ராப் விகிதங்களை கடுமையாக குறைத்துள்ளது. இந்த வழக்கில் ஜியோ இதே முறையில் தன் வேலையை தொடர்கிறது என்றால், அவர்கள் மார்ச் வரை வரம்பற்ற சேவைகளை நிச்சயமாக வழங்க வாய்ப்பு மிகமிக குறைவே ஆகும்.

45,000 மொபைல் கோபுரங்கள்
அனைத்திற்கும் மேலாக ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் அதன் 4ஜி நெட்வொர்க்கை அதிகரிக்கும் நோக்கத்தில் மற்றும் கால் ட்ராப் அழைப்பு துளி விகிதத்தை குறைக்கும் நோக்காதிலும் அடுத்த சில மாதங்களில் 45,000 மொபைல் கோபுரங்களை நிறுவும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
ஆர்.காம் அதிரடி : லேண்ட்லைனில் ஆண்ட்ராய்டு, 4ஜி, விரைவில் ஹோம் போன்.!


Click it and Unblock the Notifications