Just In
- 8 hrs ago மே 1 முதல் அமல்.. ICICI BANK-ன் புது ரூல்ஸ்.. IMPS உட்பட பல சேவைகளின் Service Charge-ல் திடீர் மாற்றம்!
- 11 hrs ago புது விதிகள்.. பேங்க் அக்கவுண்ட்.. கஸ்டமர்களுக்கு ரூ.325 கட்டணம்.. உங்க அக்கவுண்ட்டில் எடுக்கப்பட காரணம்?
- 14 hrs ago கழிவறையில் "கை வைக்கும்" இந்திய ரயில்வே.. Gandhvedh என்கிற மானிட்டர்-ஐ உள்ளே இன்ஸ்டால் செய்ய முடிவு.. ஏன்?
- 15 hrs ago வரலாற்று விலை குறைப்பு.. 50% டிஸ்கவுண்ட்.. பாதி விலைக்கு கிடைக்கும் Samsung-ன் பிரீமியம் போன்.. என்ன மாடல்?
Don't Miss
- Finance தண்ணீர் இல்லை, மணல் கிடையாது.. அலமாரியில் சோளம் விளைவிக்கும் நாமக்கல் விவசாயி..!!
- News ஆஹா.. மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்.. முய்சு கட்சிக்கு பெரிய வெற்றி! சீனாவுக்கு கொண்டாட்டம் தான்! ஏன்
- Sports வாயை மூடுங்க டுபிளசிஸ்! ரோகித் சர்மாவை பார்த்து திருந்துங்க.. ரெய்னா கடும் தாக்கு
- Automobiles 2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
- Lifestyle Today Rasi Palan 22 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகள் எடுக்க மிகவும் சாதகமான நாள்...
- Movies கில்லி அளவுக்கு ’கோட்’ வந்தா நான் பினிஷ்.. வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்களின் ஒரே கோரிக்கை இதுதான்!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
தமிழகத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட 20 MHZ அலைக்கற்றை செயல்படுத்தும் ஜியோ..
இந்திய அரசின் தொலை தொடர்புத் துறையால் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட அலைக்கற்றை ஏல செயல் நடவடிக்கையின் போது இந்தியாவில் உள்ள அனைத்து 22 வட்டங்களிலும் அலைக்கற்றையைப் பயன்படுத்துவதற்கான உரிமையை ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிட்டட் (RJIL) கடந்த மார்ச் மாதம் வெற்றிகரமாக பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் 850 MHZ, 1500 MHZ மற்றும் 2300 MHZ பேண்ட்களில் இந்த அலைக்கற்றைகளைப் பெற்றிருந்தது. தமிழகத்தில் கூடுதலாக 850 MHZ பேண்டில் 5 MHZ; 1800 MHZ பேண்டில் 5MHZ மற்றும் 2300 MHZ பேண்டில் 10 MHZ அலைக்கற்றைகளை ஜியோ நிறுவனம் ஏலத்தில் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் அமைந்துள்ள 22,000 தொலைத்தொடர்பு அமைவிடங்கள் அனைத்திலும் மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அலைக்கற்றைகளிலும் கூடுதலாகப் பெறப்பட்டிருக்கும் அலைக்கற்றைகளின் பயன்பாடு நடவடிக்கையை ஜியோ தொடங்கியிருக்கிறது. இதன்மூலம் 850 MHZ, 1800 MHZ மற்றும் 2300 MHZ பேண்ட் பயன்பாட்டிற்குக் கிடைக்கக்கூடிய மொத்த அலைக்கற்றை அகலம் 50% முன்னேற்றம் பெரும்.
இந்த நடவடிக்கையானது, ஜியோ வலையமைப்பின் செயல்திறனை 50% அளவிற்கு உயர்த்தி இருப்பதோடு, தமிழ்நாட்டில் மிக அதிக தரவு வேகம் இருப்பதையும் மற்றும் மேம்படுத்தப்பட்ட வலையமைப்பு அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கப்பெறுவதையும் சாத்தியமாகியுள்ளது. தற்போதுள்ள பெருந்தொற்று சூழலில் நிகழும் பொது முடக்கத்தைக் கருத்தில் வைத்துப் பார்க்கையில் கூடுதல் அலைக்கற்றை சேர்க்கப்பட்டிருப்பது உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையாக இருக்கிறது.
வீட்டிலிருந்து வேலைபார்ப்பவர்கள், ஆன்லைனில் பாடங்களைப் பயிலும் மாணவர்கள், வீட்டிலிருந்து பிசினஸ் செய்யும் தொழில்முனைவோர்கள் அனைவருக்கும் இது உதவும். வீட்டில் பாதுகாப்பாக இருந்துகொண்டு டிஜிட்டல் முறையில் தங்களின் வேலைகளைச் சிக்கல் இல்லாமல் முடிக்க இது வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. அதேபோல் இது குறிப்பாக மருத்துவத்துறை பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பது உறுதி.
சமீபத்தில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில் ரூ. 57,123 கோடி மதிப்பில் 20 ஆண்டுகள் கால அவருக்கு 488.35 MHZ என்ற மொத்த அலைக்கற்றை 22 வட்டங்களில் ரிலையன்ஸ் ஜியோ பெற்றது. இதன் மூலம் தனது மொத்த அலைக்கற்றை அளவை 1717 MHZ ஆக உயர்த்தியுள்ளது. அதாவது 50% இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பெறப்பட்டிருக்கும் கூடுதல் அலைக்கற்றையின் மூலம் தனது 426 மில்லியன் வாடிக்கையாளருக்கு ஜியோ சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. இன்னும் கூடுதலாக 300 மில்லியன் பயனர்களைச் சேர்த்துக்கொள்ளவும், 5ஜி சேவைகளுக்கான மாற்றத்தை நோக்கி மேம்படவும் ஜியோவிற்கு இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470