மெல்ல மெல்ல தொடங்கி ஒட்டுமொத்தமாக கிழியும் ஜியோ முகமூடி.!
ரிலையன்ஸ் ஜியோ சலுகைகள், முக்கியமாக அறிமுக ஆபர்கள் மிகவம் கவர்ச்சிகரமானது தான். ஆனால், பார்தி ஏர்டெல் தான் நாட்டின் சிறந்த நெட்வெர்க் ஆகும் என்பதை நிரூபிக்கும் அம்சங்கள்.
கிட்டத்தட்ட, ஐந்து மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ என்ற முற்றிலும் புதிய தொலைத்தொடர்பு சேவை இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் குறிப்பிடப்பட்ட வோல்ட் ஆதரவு சாம்சங் ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்து கவர்ச்சியான வாய்ப்பை கொண்டு நுழைந்தது. பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அதன் சேவையை இந்தியாவில் உள்ள அனைத்து 4ஜி பயனர்களுக்கும் உத்தியோகபூர்வமாக மாற்றியது.
ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய அதிரடி சலுகைகளின் கீழ் இந்தியாவின் மாபெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்றவைகள் காணாமலடிக்கப்பட்டன. இப்போது நாட்கள் கடந்து விட்டது ஜியோவின் இலவச 'பிரசாதங்கள்' மற்ற பிரபல நிறுவனங்களை காட்டிலும் கூடுதல் நன்மைகளை வழங்கினாலும் கூட ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஆகாது. ஏர்டெல் தான் சிறந்தது, எப்படி.?

முடியாத காரியமாகும்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நேரடியாக 4ஜி சேவை வழங்குகிறது அதாவது அதனிடம் 2ஜி மற்றும் 3ஜி சேவைகள் கிடையாது. ஆக ஜியோ 4ஜி சிம் அட்டையை 4ஜி அல்லாத ஸ்மார்ட்போனில் பயன்படுத்துவது என்பது முடியாத காரியமாகும்.

பயன்படுத்த முடியும்
மறுபுறம், நாட்டில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சேவைகளை (2ஜி, 3ஜி மற்றும் 4ஜி) வழங்கும் ஏர்டெல் நெட்வெர்க்கை எந்த ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்த முடியும்.

வோல்ட் ஆதரவு
ரிலையன்ஸ் ஜியோ முன்பு கூறியது போல ஜியோ 4ஜி சிம் அட்டையை ஒரு 4ஜி செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனில் மட்டுமே பயன்படுத்த முடியும் மற்றும் கூடுதலாக, உங்கள் ஸ்மார்ட்போன் அழைப்புகளை மேற்கொள்ள வோல்ட் ஆதரவு பெற்றிருக்க வேண்டும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நிறைவானதாகும்
நிச்சயமாக ஜியோ போல வாழ்நாள் முழுவதும் இலவச அழைப்புகளை வழங்க முடியாது என்ற போதிலும் கூட இந்த விடயத்தில் ஏர்டெல் ரிலையன்ஸ் ஜியோவை விட மிக நிறைவானதாகும்.

கால் டிராப் உண்டு தான்
தற்போது, ரிலையன்ஸ் ஜியோ கிட்டத்தட்ட 5 கோடி அழைப்பு இழப்புகளை தினசரி சந்திக்கிறது. குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலாக அழைப்புகள் எதுவாக இருப்பினும், நீங்கள் எத்தனை முறை டயல் செய்தாலும் இணைப்பு ஏற்படுவதே இல்லையாம். ஏர்டெல் நெட்வெர்க்கில் கால் டிராப் உண்டு தான் ஆனால், ஜியோ அளவிற்கு கிடையாது.

அதன் தரவு வேகம்
உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு முன் தரவு வேகம் 40எம்பிபிஎஸ் வரை உயர் வேகத்தில் கிடைத்தது அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு பின்னர் 24 மில்லியன் பயனர்களை பெற்ற பின்னர் இப்போது அதன் தரவு வேகம் 500 கேபிபிஎஸ் என்பதாக உள்ளது.

அறிக்கை
டிராய் சமீபத்திய அறிக்கை ஒன்றில், ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மெதுவான 4ஜி நெட்வொர்க்கில் ஒன்றாகும் என்று அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒரு வாரத்திற்கு மேல்
ரிலையன்ஸ் ஜியோவின் மிக மோசமான முகம் வாடிக்கையாளர் சேவையில் வெளிப்படுகிறது. முகேஷ் அம்பானி இகேவைசி (eKYC) மூலம் ஒரு மணி நேரத்தில் சிம் ஆக்டிவேஷன் நடக்கும் என்று உறுதியளித்திருந்தார் ஆனால் இவ்விடயத்தில் ஒரு புதிய சிம் கார்டு செயல்படுத்த குறைந்தது ஒரு வாரத்திற்கு மேல் நிறுவனம் எடுத்துக் கொண்டது.

மேலும் படிக்க
வாட்ஸ்ஆப் மெசேஜை படிக்காமலேயே லாஸ்ட் சீன் செக் செய்வதெப்படி.?


Click it and Unblock the Notifications