சந்தையில் கலக்கும் ஜியோ-சாதனையிலும் உச்சம்: அடுத்த அதிரடி,!
தற்போது 30 கோடி வாடிக்கையாளர்களையும் கடந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய தொலைத் தொடர்பு துறையில் 3ம் இடத்தை பிடித்துள்ளது ஜியோ. reliance jio crosses 300 mn customers mark
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு இந்திய தொலைத் தொடர்பு சேவையில் நுழைந்தது.
அன்று முதல் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. இதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை பெற்றது.

தற்போது 30 கோடி வாடிக்கையாளர்களையும் கடந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்திய தொலைத் தொடர்பு துறையில் 3ம் இடத்தை பிடித்துள்ளது ஜியோ.

4ஜி டேட்டா இலவசம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி டேட்டாவை கடந்த 2016ம் ஆண்டு 3 மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவித்தது.

வாய்ஸ் கால்கள் ப்ரீ:
2016ம் ஆண்டு இறுதி வரைக்கும் வாய்ஸ் கால்களையும், இலசவமாக அறிவித்தது. இதில் இந்தியா முழுவதும் லோக்கல் எஸ்டிடி கால்கள் இலவசமாகப்பட்டது. மேலும் ரோமிங்கும் இல்லை. இலவச காலர் டியூன், மிஸ்டு கால் அலர்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் வழங்கியது.

10 கோடி வாடிக்கையாளர்கள்:
சேவை அறிமுகம் செய்யப்பட்ட 170 நாட்களில் ஜியோவுக்கு 10 கோடி வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு சலுகைகையும் ஜியோ நிறுவனம் வழங்கி வருகின்றது.

30 கோடி வாடிக்கையாளர்கள்:
ஜியோ நிறுவனம் தற்போது 30 கோடி வாடிக்கையாளர்களையும் தாண்டி சாதனை படைத்துள்ளது. குறுகிய ஆண்டில் இத்தனை வாடிக்கையாளர்களை பெற்ற நிறுவனமாக ஜியா இருக்கின்றது.

ஏர்டெல்லை வாடிக்கையாளர்கள் :
30.4 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் இருக்கின்றது. ஏர்டெல் நிறுவனம் இந்த சாதனையை நிகழ்த்த 19 ஆண்டு தேவைப்பட்டது.

ஏர்டெல்லை வீழ்த்த வாய்ப்பு:
இன்னும் சில மாதங்களில் ஜியோ நிறுவனம் ஏர்டெல்லின் சாதனையை தவிடு பொடியாக்கும் சூழ்நிலை இருக்கின்றது என்று கூறி வருகின்றது.


Click it and Unblock the Notifications