Just In
- 39 min ago கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- 1 hr ago உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- 1 hr ago கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- 3 hrs ago மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
Don't Miss
- Movies நீங்கள் என் படத்தை பார்த்திருக்க மாட்டீங்க.. ஹரியிடம் ஓபனாக சொன்ன கமல் ஹாசன்
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வோடபோன் ஐடியா நிறுவனம் மீது ரிலையன்ஸ் ஜியோ புகார்: காரணம் இதுதான்.!
சமீபத்தில் ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் ப்ரீபெய்ட் கட்டண விலைகளை உயர்த்தின. மேலும் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வால் வாடிக்கைளாளர்கள் தங்களுக்கு ஏற்ற பிற டெலிகாம் சேவைக்கு மாற அதிக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் பிற டெலிகாம் சேவைக்கு மாற இருக்கும் வாடிக்கையாளர்களை தடுக்க வேண்டும்
என்பதற்காக ஒரு தரமான வேலையை செய்துள்ளது. அதாவது வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ப்ரீபெய்ட்வாடிக்கையாளர்களுக்கு
அளிக்கும் எஸ்எமஎஸ் (sms) சேவையை 99 ரூபாய் திட்டத்தில் இருந்து நீக்கிவிட்டு 179 ரூபாய் திட்டம் முதல் அளித்து வருகிறது.எனவே இதனால் வாடிக்கையாளர்கள் MNP அதாவது மொபைல் நம்பர் போர்ட் செய்வதற்குத் தடையாக இருக்கும் என டிராய் அமைப்பிடம்குற்றம் சாட்டியுள்ளது ஜியோ நிறுவனம்..
எல்லாம் பண்ணியாச்சு., இதையும் செய்ய வேண்டியதுதான்- ஜியோபோன் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்!
இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் கம்மி விலையில் வழங்கி வந்த எஸ்எம்எஸ் நன்மைகளை நிறுத்தியுள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம். இதனால் அந்நிறுவனத்தின் பயனர்கள் மொபைல் நம்பர் போர்ட் செய்வதற்கு சற்று உயர்வான விலை கொண்டப்ரீபெய்ட் திட்டங்களை தேடவேண்டிய நிலை உள்ளது..
ஆன்லைனில் உணவு ஆர்டர்.. ரூ. 89,000 வங்கிக் கணக்கில் அபேஸ்.. என்ன நடந்தது தெரியுமா? உஷார் மக்களே.!
குறிப்பாக 179 ரூபாய் திட்டத்திற்கு கீழ் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் mobile number portability செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் இது பிற நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது என ஜியோ நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
அதேபோல் டிராய் அமைப்பு mobile number portability செய்வதற்கு எஸ்எம்எஸ் சேவை இலவசம் என்றோ அல்லது mobile number portability செய்வதற்கு அதிக தொகை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய தேவை இல்லைஎன்றோ அறிவிக்க வேண்டும் என ரிலையன்ஸ் ஜியோ கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் வெளிவந்த GizChina அறிக்கையின்படி, வரும் 2022-ம் ஆண்டிற்குள் ஜியோ டிவி, ஜியோ டேப்டெல் மாடல்கள் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் ஜியோ லேப்டாப் மாடலையும் வெளியிட திட்டமிட்டுள்ளது. தற்போது ஜியோ லேப்டாப் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ டிவி மற்றும் ஜியோ டேப்லெட்டின் முக்கிய விவரக்குறிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த இரண்டு சாதனங்களும் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மற்ற ஆண்ட்ராய்டு டேப்லெட்டைப் போலவே ஜியோ டேப்லெட் பெரிய டிஸ்ப்ளே மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆதரவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் ஜியோ டேப்லெட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ டேப்லெட்ஆனது சாம்சங், மோட்டோ, லெனோவா போன்ற நிறுவனங்களின் டேப்லெட் மாடல்களுடன் போட்டியிட வாய்ப்பு உள்ளது
அதேபோல் புதிய ஜியோ டேப்லெட் ஜியோபோன் நெக்ஸ்ட் போன்ற பிரகதி ஓஎஸ் அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜியோ டிவி ஆனது OTT ஆப்ஸ்களை ஆதரிக்கும் என்றும், பின்பு ஜியோவின் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கும்செட்-டாப் பாக்ஸ் பேக்கேஜுடன் வரலாம் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் ரூ.1 ப்ரீபெய்ட் திட்டமானது, எந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் வழங்கிடாத மிக மலிவான ப்ரீபெய்ட் சலுகையாகும். தேவைக்கு அதிகமாக டேட்டா பெற விரும்பாத குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது. ரூ.1 ரீசார்ஜ் திட்டம் என்பது தனியார் நிறுவனங்கள் எதுவும் தங்கள் பயனர்களுக்கு வழங்கிடாத வசதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ அமைதியாக ரூ.1 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மொபைல் பயன்பாட்டில் தெரிந்தாலும் அதன் இணையதளத்தில் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரூ.1 ப்ரீபெய்ட் பேக்கில் கிடைக்கும் சலுகைகளை பார்க்கலாம்.
ரூ.1 ப்ரீபெய்ட் பேக் திட்டத்தில் பயனர்களுக்கு 30 நாட்கள் காலவரையோடு 100 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த வவுச்சரை பயன்படுத்தி 10 முறை ரீசார்ஜ் செய்தால் ரூ.10 செலவாகும்., இதன் அடிப்படையில் 30 நாட்களுக்கு தினசரி 100 எம்பி என்ற அடிப்படையில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். கட்டண உயர்வுக்கு பிறகு ஜியோ ரூ.15-க்கு 1ஜிபி 4ஜி வேக டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரூ.1-க்கு 100 எம்பி டேட்டா என்றால் ரூ.10-க்கு 1ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த 100 எம்பி டேட்டா 4ஜி வேகத்தில் கிடைத்த பிறகு இதன் வேகம் 64 கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்படும்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கும் முதல் ஆபரேட்டராக மாறி இருக்கிறது. டெலிகாம் வழங்கும் ரூ.1 ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது நாட்டில் உள்ள எந்த தொலைத் தொடர்பு நிறுவனமும் வழங்கிடாத மலிவான ப்ரீபெய்ட் சலுகையாகும். தேவைக்கு அதிகமாக டேட்டா பயன்படுத்தாத குறைந்த வருமானம் கொண்டவர்கள் இது மிகவும் பேருதவியாக இருக்கும்.
News Source: republicworld
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470