விரைவில் : பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ 4ஜி சேவை..!
இந்திய அரசு நடத்தும் தொலைதொடர்பு ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் நிறுவனம், ரிலையன்ஸ் உடன் 2ஜி மற்றும் 4ஜி சேவைகளுக்கான உள்-வட்ட ரோமிங் ஓப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளது.
இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பெற்ற பிறகு, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவைகளுக்கான குரல் அழைப்புகள் சேவையில் இருந்து 2ஜி சேவையை பெற முடியும். பின்னர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ 4ஜி சேவையையும் பெரும் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட இருக்கிறது.

தரம் :
"இந்த ஒப்பந்தம் மூலம் வாடிக்யாளர்களுக்கு பெருமதிப்பு வழங்கவும், எங்கள் எல்லையை விரிவு படுத்தவும், பிணைய திறன்களை வலுப்படுத்தும் முக்கியமாக தரம் உயர்த்தப்படும்" என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

வலிமை :
உடன் இந்த ஒப்பந்தம் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு இருவரும் பயனடைவார்கள், இரண்டு நெட்வொர்க்குகளும் வலுவடையும் என்றும் பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

4ஜி கைபேசி :
மூன்று மாதங்களுக்குள் முடிவடையும் எங்கள் பிணைய மேம்படுத்தும் பணிக்கு பின்பு 4ஜி கைபேசியில் கொண்ட பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஜியோ 4ஜி சேவையை பயன்படுத்த முடியும்.

விரைவில் :
அது சார்ந்த விலை மற்றும் திட்டம் இரு நிறுவனங்கள் மூலம் விரைவில் இறுதி வடிவம் பெரும் என்றும் பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்கள் :
அதுமட்டுமின்றி ஜியோ வாடிக்கையாளர்கள் குரல் அழைப்புகள் மேற்கொள்ள பிஎஸ்என்எல்-ன் 2 ஜி நெட்வொர்க்கையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ரோமிங் :
"நாங்கள் சொந்தமாக ஒரு புதிய பிணைய த்தை உருவாக்குக்கிறோம், இத்தகைய உடன்பாடுகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரோமிங் இணைப்பில் இருக்க அதிகம் உதவும்" என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க :
குற்றம் சொன்ன ஏர்டெல், அம்புட்டு பேருக்கும் ஆப்பு வைத்த ஜியோ..!
பிஎஸ்என்எல் வழங்கும் அன்லிமிட்ட் வாய்ஸ் சிறப்பு சலுகைகைகள் என்னென்ன..??
ரிலையன்ஸ் ஜியோ - ஏர்டெல் - வோடபோன் - ஐடியா : 4ஜி சேவை கட்டண ஒப்பீடு..!


Click it and Unblock the Notifications








