Home
News

அனில் அம்பானியின் ரூ.15 ஆயிரம் கோடியை காப்பாற்றிய ஜியோ.!

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ .15,000 கோடியை அடுத்த நிலைக்கும் கூடுதலாக வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

By Siva Lingam

ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் சமீபத்தில் தொலைத்தொடர்பு துறையிடம் விரைவில் தங்களது நிறுவனத்தை ரிலையன்ஸ் ஜியோவுக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் இதனையடுத்து இந்நிறுவனத்தின் வங்கி கியாரண்டி மதிப்பான ரூ.774 கோடியை அந்நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என்றும், அந்நிறுவனமே தங்களது நிறுவனத்தின் மொத்த உரிமையையும் எடுத்து கொள்ளும் என்றும் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் தொலைத்தொடர்பு துறைக்கு கடிதம் மூலம் தெரிவித்த தகவல் என்னவெனில் வங்கி கியாரண்டி ரூ.774 கோடிக்கு பொறுப்பேற்பது மட்டுமின்றி அடுத்த 15-16 ஆண்டுகளுக்கு ஜியோ நிறுவனமே இந்நிறுவனத்தின் வரவு-செலவு உள்பட முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் என்று அறிவித்துள்ளது. இதனை தொலைத்தொடர்பு துறையும் உறுதி செய்துள்ளது.

இமெயில்

இமெயில்

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ .15,000 கோடியை அடுத்த நிலைக்கும் கூடுதலாக வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டு ஏலங்களில், 18 ஆண்டுகளுக்கு மேலாக பணம் செலுத்தும் வகையில், இந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் காம் வாங்கியது.

இமெயில்களில் வரும் கருத்துக்களுக்கு ஜியோ மற்றும் ரிலையன்ஸ் காம் நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும் கடந்த வியாழக்கிழமை பி.எஸ்.இ பங்குசந்தையில் ஆர்.காம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 9.3% அதிகரித்தது. இதனால் இந்நிறுவனத்தின் பங்கு ரூ.20.07ஆக தற்போது உள்ளது.

774 கோடி

774 கோடி

தொலைத்தொடர்புத்துறை இந்நிறுவனத்தின் அலைக்கற்றை கடன் ரூ.774 கோடி அளவுக்கு இருக்கும் நிலையில் அதன் உரிமங்களை இரத்து செய்வதற்கான நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் மனுவை விசாரிப்பதற்காகவும் தொலைத் தொடர்புக் கோரிக்கைகள் மற்றும் மேல் முறையீட்டு மனுவை விசாரிப்பதற்காகவும் முடிவு செய்துள்ளது.

ஆர்.காம் நிறுவனம்

ஆர்.காம் நிறுவனம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ரத்து செய்யாமல் இருக்க ரூ. 900 கோடிக்கு வங்கி உத்தரவாதத்தை இந்நிறுவனம் அளித்ததாக தொலைத்தொடர்பு துறை குறிப்பிட்டுள்ளது.. எனவே ஆர்.காம் நிறுவனம் இன்னும் மோசமான நிலையை அடையவில்லை.

ஜியோ

ஜியோ

சட்டவிரோத, தன்னிச்சையான மற்றும் அதிகார வரம்பிற்கு உட்பட்டது "என்று தனது மனுவில் ஆர்.காம் நிறுவனம் தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் கூறியுள்ளது. எனவே 14 வட்டங்களில் ரத்து செய்யப்பட்ட ஆர்.காம் நிறுவனத்தின் உரிமங்களை மீண்டும் உயிர்ப்பெற செய்யவே ஜியோவுக்கு கைமாறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 10

ஆகஸ்ட் 10

ஆர்.காம் நிறுவனம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஜியோவுக்கு தங்களுடைய வயர்லெஸ் சொத்துக்களை விற்பதாகவும், அதுமட்டுமின்றி கனடாவில் உள்ள புரூக்பீல்ட் நிறுவனத்தால் ரூ.46 ஆயிரம் கோடி பணத்தை கடனாளிகளுக்கு திருப்பி செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


எனவே ஆகஸ்ட் 10ஆம் தேதி இதுகுறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்க போவதில்லை என தொலைத்தொடர்பு துறை தெஇவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஸ்பெக்ட்ரம் செலுத்தும் வகையில் தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே வங்கி உத்தரவாதம் அளித்திருந்தது என டெல்கோ கூறியுள்ளது. ஆர்.காம் நிறுவனத்தின் விற்பனை காரணமாக வரும் 2019ஆம் ஆண்டு மார்ச்/ஏப்ரல் மாதம் வரையிலான வங்கி உத்தரவாதங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உரிமங்களை ரத்து செய்தால், தொலைத் தொடர்புத் துறையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு உரிமம் பெற பலர் வரமாட்டார்கள் என்றும், தொலைத்தொடர்பு துறைக்கும் இழப்பு நேரிடும். ஆர்.காம் மற்றும் அதன் அலகுகளிலிருந்து தாமதமிருந்தால், அது தனது உத்தரவாதத்தை இழந்துவிடும் என்றும் உரிமங்களை இரத்து செய்வதன் மூலம் தங்களுக்கு எதுவும் கிடைக்காதது மட்டுமின்றி பணத்தையும் இழந்திருப்போம்" என்று ஆர்.காம் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். .

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் இந்நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது என்பதால் இந்நிறுவனம் திவாலில் இருந்து தப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio becomes Anil's Rs 15,000 crore saving grace : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X