பயனர்கள் மீதான சராசரி வருவாய் பெறுவதில் ஜியோ தான் நம்பர் 1.!
ரிலையன்ஸ் ஜியோ 9.29 சதவீத பங்குகளை மார்ச் 31 ஆம் தேதிக்குள் விற்பனை செய்துள்ளது.!
ஜியோ பொருத்தமாட்டில் அனைத்து பயன்களிடம் சராசரி வருவாய் பெற்றுவருகிறது, ஆரம்பத்தில் பல இலவசங்களை கொடுத்து தற்போது அதிகப்படியான வருவாயை எதிர்பார்த்து காத்துக்கொண்டுடிருக்கிறது ஜியோ.

வயர்லெஸ் தரவு சந்தாதாரர்களுக்கு மிகப் பெரிய சலுகையை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு பதிலாக, அடுத்த இரண்டு காலாண்டுகளில் தரவு விலைகள் குறைக்கப்படும் திட்டம் கொண்டுவரப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ 9.29 சதவீத பங்குகளை மார்ச் 31 ஆம் தேதிக்குள் விற்பனை செய்துள்ளது என்று சமீபத்தில் இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 31, 2017 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரிலையன்ஸ் ஜியோ 10.86 கோடி சந்தாதாரர்களை கொண்டுள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 8.83 சதவீதமாகவும், மார்ச் மாதத்தில் 58.39 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இப்போது, இந்தியாவில் நான்காவது பெரிய வயர்லெஸ் தொலைதொடர்பு ஆபரேட்டர் ஆனது ஜியோ.
இருப்பினும், ஏர்டெல் நிறுவனம் 27.3 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. செப்டம்பர் 5, 2016 அன்று ரிலையன்ஸ் ஜியோ தனது 4ஜி சேவைகளை வரவேற்கும் வாய்ப்பினைத் துவக்கியது. இது வரம்பற்ற தரவு, குரல், வீடியோ அழைப்பு போன்ற பல சேவைகளை வழங்கியது.
இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் மொத்த கடன் தொகை சுமார் ரூ.4.6 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. இது கடந்த மார்ச்சில் முடிவுற்ற 2016-2017 நிதி ஆண்டு இறுதியில் இருந்த தோராயமான நிலை.


Click it and Unblock the Notifications