ஒரு ரிசார்ஜ் செய்தால் மற்றொன்று இலவசம் - ஜியோ அட்டகாசம்.!
எந்தெந்த ரீசார்ஜில் இந்த சலுகை கிடைக்கும்.?
ஏற்கனவே போதுமான புரட்சிகளை நிகழ்த்திவிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இப்போது ஒரு புதிய லிமிடெட் ஆபர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ப்ரைம் சேவையின்கீழ் இணையும் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் 'ஒரு ரிசார்ஜ் செய்தால் மற்றொன்று இலவசம்" என்ற புதிய சலுகையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.!
இந்த சலுகையின்கீழ் ஒரு புதிய ரிலைன்ஸ் ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்களாக நீங்கள் என்னென்ன சலுகைகளை பெறலாம்.? எந்தெந்த ரீசார்ஜில் இந்த சலுகை கிடைக்கும் என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

5ஜிபி இலவசம்
இந்த புதிய சலுகையின்கீழ் ரூ.303/- என்ற மாதாந்திர ரீசார்ஜ் செய்யும் பயனர் ரூ.201/ ரீசார்ஜ் மதிப்புள்ள 5ஜிபி அளவிலான தரவை கூடுதலாக பெறுவர்.

10ஜிபி இலவசம்
மற்றும் இந்த அட்டகாசமான ஜியோ சலுகையின்கீழ் ரூ.499/- ரீசார்ஜ் மற்றும் அதற்கும் மேலான ரீசார்ஜ்களை நிகழ்த்தினால் கூடுதலாக 10ஜிபி அளவிலான இலவச தரவை பெறலாம். இந்த சலுகையை அனுபவிக்க நீங்கள் மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பே ரீசார்ஜே நிகழ்த்த வேண்டும்.

ட்விட்டரில்
இந்த சலுகை பற்றிய முதல் தகவாலானது ட்விட்டரில் காணப்பட்டது என்பதும் அந்த ட்வீட்டின்படி இலவச பயன்கள் நிறுவனம் மூலம் தானாகவே சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜியோ ப்ரைம்
நினைவூட்டும் வண்ணம் மார்ச் 31-ஆம் தேதியோடு ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய இலவச சேவைகள் முடிவிற்கு வருகிறது அதற்கு பின் ஜியோ ப்ரைம் கட்டண சேவைகள் ஆரம்பிக்கிறது. அதன் கீழ் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா பயன்பாட்டு எல்லை கொண்ட தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகிய நன்மைகளை அனுபவிக்கலாம்.

நன்மைகளில் வேறுபாடு
ரூ.499/- ரீசார்ஜின் கீழ் நாள் ஒன்றுக்கு 2ஜிபி என்ற டேட்டா பயன்பட்டு எல்லை பெறலாம் என்பதும் ரிலையன்ஸ் ப்ரைம் சந்தா பயனர்கள் மற்றும் ப்ரைம் சந்தா பயன்ரகளாய் அல்லாதவர்கள் என இரண்டு தரப்பினருமே ஜியோ ப்ரைம் சேவைகளை அனுபவிக்கலாம். ஆனால், 80% அளவில் நன்மைகளில் வேறுபாடு இருக்கும். என்னென்ன வித்தியாசம் என்பதை பற்றி படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும் படிக்க
நமக்கே விபூதி அடிக்க பார்க்கும் ஜியோ, உஷாராக இருங்க மக்களே.!


Click it and Unblock the Notifications