ஜியோ யூஸ் பண்ணவருக்கு ரூ.27000/- பில்.!
இந்தியாவில் பெரும்பாலானோரும் ஜியோ சிம் கார்டு இலவசம் எனக் கருதி பயன்படுத்தி வரும் நிலையில் ஜியோ பயனாளி ஒருவருக்கு அதிகத் தொகை செலுத்தக் கோரும் பில் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இண்டர்நெட், வாய்ஸ் கால் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவித்து நாடு முழுக்க ஜியோ பிரபலமானது. ஜியோ சிம் விற்பனை செய்யப்பட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது. இதனால் ஜியோ சிம் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இந்நிலையில் ஜியோ சிம் பயன்படுத்திய வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ.27,000 வரை பில் அனுப்பப்பட்டுள்ளதாம்.. இது உண்மை தானா.??

வாட்ஸ்ஆப்
கொல்கத்தாவைச் சேர்ந்த ஜியோ சிம் பயனாளி ஒருவருக்கு ரூ.27,718.5/- செலுத்த வேண்டும் என்ற பில் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் வேகமாகப் பரவி வருகிறது.

ஃபேஸ்புக்
இது குறித்த ஃபேஸ்புக் போஸ்ட் ஒன்றில் போலி ஜியோ பில் உருவாக்கிய நபர் கைது என்ற ரீதியில் போலி பில் தான் என்பதை உறுதி செய்யும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விளக்கம்
எனினும் ரிலையன்ஸ் ஜியோவின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இது குறித்த விளக்கம் ஏதும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரீபெயிட்
ஜியோ சிம் கார்டுகள் முற்றிலும் பிரீபெயிட் சேவைகள் என்பதால் ஜியோ ஏன் பிரீபெயிட் சேவைகளுக்குப் பில் அனுப்ப வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களும் உண்மையற்றதாக இருக்கிறது.

புரளி
இந்தப் பில் ஜியோ சார்பில் அனுப்பப்பட்டிருந்தால் பலருக்கும் அனுப்பட்டிருக்க வேண்டும். இதோடு இது குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கும். ஜியோ சார்பில் எவ்வித தகவலும் இது குறித்த வழங்கப்படவில்லை என்பதால் இது புரளியாகவே எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு: ரிலையன்ஸ் ஜியோ தொடுபுழா என்ற பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் இந்தப் பக்கம் ஜியோவின் அதிகாரப்பூர்வ பக்கம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications