ரேஷன் வாங்கக்கூட ஒடிபி நம்பர் அவசியம்: பாவம்ய மக்கள்.!
குறிப்பாக இந்த ஒடிபி முறையை முதலில் கோவை மாவட்டத்தில் சோதனை முறை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் தற்சமயம் புழக்கத்தில் இருப்பது என்னவென்றால் ஸ்மார்ட் கார்டில் 'க்யூ.ஆர்' கோடு என்ற மென்பொருள் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, இதை ரேஷன் கடையில் உள்ள டிவைசில் பதிவு செய்த பின்னரே பொருட்கள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரேஷனில் வாங்கிய பொருட்கள் பற்றிய விபரம் முழுவதும் ரேஷன் கார்டில் பதிவு செய்ய்பட்ட மொபைலுக்கு எஸ்எம்எஸ்-ஆக அனுப்படுகிறது. இந்நிலையில் இம்முறைக்கு பதிலாக புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உணவுப்பொருள் வழங்கள் முறை முடிவு செய்துளளது.
அது என்னவென்றால் பொருட்கள் தரும் முன்பே, ஸ்மார்ட் கார்டை ரேஷன் கடையிலுள்ள டிவைசில் பதிவு செய்தவுடன், மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். அந்த எஸ்எம்எஸ்-ல் ஒடிபி எண் அனுப்பப்பட்டிருக்கும், அந்த எண்ணை ரேஷன் கடைக்காரிடம் தெரிவித்தால், அதை சரி பார்த்த பின்புதான் பொருட்கள் வழங்கப்படும்.

இந்த புதிய திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்கள் சரியான முறையில் குடும்ப அட்டைதாரருக்கே போய்ச்சேரும். மேலும் உணவுப்பொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒடிபி திட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த உணவு வழங்கள் துறை முடிவு செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் சுமார் 12 கோடியே 13லட்சத்து 183 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு தமிழகம் முழுக்க 34 ஆயிரத்து 773 ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

குறிப்பாக இந்த ஒடிபி முறையை முதலில் கோவை மாவட்டத்தில் சோதனை முறை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது, மேலும் ஒடிபி முறை மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்க பொருந்தாது என்று உணவு பொருள் வழங்கள் துறை தெரிவித்துள்ளது.

விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஸ்மார்ட் கார்டில் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்று உணவு வழங்கள் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications