Just In
- 1 hr ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 2 hrs ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 2 hrs ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 5 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வில் "ப்ளூடூத் செருப்பு"டன் சிக்கிய விஷமிகள்.. கப்ஸா அடிக்க இப்படி ஒரு முயற்சி
பள்ளியில் மாணவர்கள் பரிட்சையில் தேர்வு எழுந்தும் போது பிட்டு அடிக்காமலும், மற்ற மாணவர்களை பார்த்து கப்ஸா அடிக்காமலும் பார்த்துக்கொள்வது ஆசிரியர்களின் வேலையாக இருக்கிறது. ஆனால், சமீபத்தில் ராஜஸ்தானில் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான ஒரு முக்கியமான தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வில் ஏமாற்ற முயன்ற ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களின் விசித்திரமான முயற்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"ப்ளூடூத் சப்பல்" அணிந்து ஆசிரியர் தேர்வில் கப்ஸா அடிக்க முயன்றவர்
ராஜஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வில் விண்ணப்பதாரர்கள் "ப்ளூடூத் சப்பல்" அணிந்து தவறான செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வரை நீங்கள் ப்ளூடூத் அம்சத்துடன் ஏராளமான கேட்ஜெட்களை பார்த்திருக்கலாம். ஆனால், இது முற்றிலும் வித்தியாசமானது. தேர்வு எழுத வந்த நபர் அணிந்திருந்த செருப்பில் புளூடூத் சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பதைத் தேர்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒருவரை வைத்து மாநிலம் முழுதும் நடத்தப்பட்ட சோதனை
இந்த தவறான செயலில் ஈடுபட்ட முதல் நபர் அஜ்மீரில் உள்ள தேர்வறையில் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. முதல் நபர் பிடிபட்ட பிறகு, காவல்துறை விரைவில் மாநிலம் முழுவதும் அனைத்து தேர்வறைக்கும் இந்த தகவலைத் தெரியப்படுத்தியது. இதன்படி, மாநிலம் முழுதும் உள்ள தேர்வறையில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் நான்கு நபர்களைத் தேர்வு அதிகாரிகள் கையும் களவுமாகக் கண்டறிந்தது.
தேர்வு எழுதிய நபரின் காதுக்குள் மைக்ரோ இயர்பட்ஸ்
பிகானர் மற்றும் சிகார் ஆகிய இடங்களில் ப்ளூடூத் மற்றும் மொபைல் சாதனங்களுடன் இதே போன்ற சப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்வெழுத வந்த நபரின் சப்பல் உள்ளே ஒரு முழு தொலைப்பேசி மற்றும் ஒரு ப்ளூடூத் கருவி இருந்து என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல், தேர்வு எழுதிய நபரின் காதுக்குள் மைக்ரோ இயர்பட்ஸ் சாதனம் இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தேர்வு மையத்திற்கு வெளியில் இருந்து உதவிய நபர்கள்
இவர்கள் தேர்வறையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு வெளியில் இருந்து மூன்றாம் நபர் யாரோ உதவியுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி ரத்தன் லால் பார்கவ் கூறியுள்ளார். சிறிய அளவிலான தொழிலாகத் தோன்றும் இந்த விரிவான மோசடித் திட்டத்தை காவல்துறை இன்னும் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. இந்த ப்ளூடூத் சப்பல் புத்திசாலித்தனமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் சில அறிக்கைகள் இதற்காக மோசக்காரர்கள் பிரத்தியேக தயாரிப்பை மேற்கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளது.
செவ்வாயில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நிலநடுக்கமா? இன்சைட் லேண்டரை அதிரவிட்ட 'மார்ஸ்குவேக்'..
இந்த சாதனத்திற்காக அவர்கள் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?
இதில் பயன்படுத்தப்பட்ட சில வன்பொருள்கள் சேர்த்துத் தேர்வு எழுதிய நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்திற்காக அவர்கள் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கியதாகவும் சில வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றித் தேர்வு அதிகாரி கூறியது, ' தேர்வு எழுதிய ஒரு நபர் தனது செருப்புகளில் ப்ளூடூத் சாதனங்களை வைத்து ஏமாற்ற முயன்றதைத் தேர்வின் தொடக்கத்தில் நாங்கள் கண்டறிந்து அவரைப் பிடித்தோம். அவருக்கு எங்கெல்லாம் தொடர்புகள் உள்ளன, யார் அவருடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.
இனி தேர்வறைக்குள் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது
அந்த தகவலை நாங்கள் உடனடியாக மற்ற மாவட்டங்களின் உள்ள தேர்வு மையங்களுக்கும் தெரியப்படுத்தி அதிகாரிகளை எச்சரித்தோம். இதன் விளைவாக ஒட்டுமொத்தமாக 5 பேர் பிடிபட்டனர். இனி வரும் காலத்தில் தேர்வின் அடுத்த கட்டத்தில் தேர்வு எழுத நபர்கள் செருப்புகள், ஷூக்கள் மற்றும் சாக்ஸுடன் யாரும் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அஜ்மீர் போலீஸ் அதிகாரி ஜெகதீஷ் சந்திர சர்மா கூறியுள்ளார்.
12 மணிநேரம் நெட்வொர்க் தடை
இதனைத் தொடர்ந்து REET தேர்வில் மோசடி செய்வதைத் தடுக்க ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் மொபைல் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் 12 மணிநேரம் துண்டிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் உள்ள 31,000 பணியிடங்களுக்கான தேர்வை 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஆவதற்கு ஒருவர் REET தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். REET எடுக்கத் திட்டமிடப்பட்ட அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கையுடன் தேர்வு நடத்தப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470