மொபைல்போன் சேவைக்கு டாட்டா காட்டிய ரிலையன்ஸ்.!
மேலும் அவர் தெரிவித்தது என்னவென்றால் ரியல் எஸ்டேட் துறையில் முழு கவனம் செலுத்த உள்ளோம், என்று அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்திய சந்தையில் வெளிநாடுகளில் இருந்து வரும் மொபைல் மாடல்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும. மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல்போன் சாதனங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவது இல்லை.

இந்நிலையில் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ்; நிறுவனம் ஆர்-காம் என்ற தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வந்தது. மேலும் இந்நிறுவனம் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது என்று அனில் அம்பானி தெரிவித்தார்.
பின்னர் இந்த ஆர்-காம் நிறுவனத்தின் 14-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றுள்ளது, குறிப்பாக இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்-காம் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி பொதுமக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் மொபைல் சேவை வழங்க ஆர்-காம் நிறுவனம் தொடங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

குறைந்த கட்டணத்தில் மொபைல் சேவை வழங்க தொடங்கியதால் இந்நிறுவனத்திற்கு 40,000கோடி கடன் ஏற்பட்டுள்ளது, எனவே தொலை தொடர்பு துறையில் இருந்து முற்றிலும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்தது என்னவென்றால் ரியல் எஸ்டேட் துறையில் முழு கவனம் செலுத்த உள்ளோம், என்று அனில் அம்பானி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் குறைந்த கட்டணத்தில் இந்நிறுவனம் மொபைல்போன்களை
விற்பனை செய்து வந்தது, தற்சமயம் இதன் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
ஆனால் ஜியோ மொபைல்போன் இன்று அளவில் கூட மிக அதிகமான மொபைல்போன்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் விற்பனை செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜியோபோன் 2 சாதனத்தில் தற்சமயம் வாட்ஸ்ஆப் அப்டேட் வந்துள்ளது, எனவே இந்த ஜியோபோன் 2 மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது என்று தான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications