டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இருக்கா?- இன்றுமுதல் புதிய விதிகள்.,இனி இப்படிதான் பயன்படுத்தனும்!

|

டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் முக்கிய செய்தி ஒன்று வந்துள்ளது. இந்திய ரிசர்வ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விதிகளில் சில மாற்றங்கள் செய்திருக்கிறது. இந்த மாற்றம் செப்டம்பர் 30(இன்று) முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இனி சர்வதேச பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பாதுகாப்புக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான மோசடிகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாமாக கோரினால் பரிவர்த்தனை

தாமாக கோரினால் பரிவர்த்தனை

இருப்பினும் வாடிக்கையாளர்கள் தாமாக கோரினால் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். அதைத்தவிர பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் வழங்கப்படமாட்டாது என்பதாகும். இந்த ஏற்பாடு பாதுகாப்பு ஏற்பாட்டை அதிகரிக்கும். சர்வதேச பரிவர்த்தனை கோருவதற்கான நடைமுறைகள் குறித்து பார்க்கலாம்.

பிஓஎஸ் முனையில் ஷாப்பிங்

பிஓஎஸ் முனையில் ஷாப்பிங்

வாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லை என்றால் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்கவும் பிஓஎஸ் முனையில் ஷாப்பிங் செய்ய தேவைப்படும் வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளை அனுமதிக்க வேண்டாம் என்பது அர்த்தம். சர்வதேச பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத அட்டை பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் இதற்கான விருப்பத்தைத் தனியாகப் பதிவு செய்ய வேண்டும்.

சேவை தேவைப்பட்டால் மட்டுமே வழங்கப்படும்

சேவை தேவைப்பட்டால் மட்டுமே வழங்கப்படும்

இன்னும் தெளிவாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், இனி வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை தேவைப்பட்டால் மட்டுமே வழங்கப்படும். தேவைப்படும் சேவைகளுக்காக இனிமேல் அவர்கள் வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள அட்டைகளுக்கு வழங்குனர்கள் தங்கள் இடர் உணர்வின் அடிப்படையில் முடிவு செய்யலாம்.

ஆன்லைனில் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போன்: பார்சலில் வந்த துணிதுவைக்கும் சோப்- உஷார்!ஆன்லைனில் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போன்: பார்சலில் வந்த துணிதுவைக்கும் சோப்- உஷார்!

உள்நாட்டுப் பரிவர்த்தனைகள்

உள்நாட்டுப் பரிவர்த்தனைகள்

உங்கள் அட்டையுடன் உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் அல்லது சர்வதேச பரிவர்த்தனைகள் வேண்டுமா என்பதை இனி நீங்களே தீர்மானிக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் இதை எந்த நேரத்திலும் தீர்மானிக்க முடியும், மேலும் இனி எந்த சேவை தேவை, எந்த சேவை தேவையில்லை என்பதை வாடிக்கையாளர்களே முடிவு செய்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மோசடியை தவிர்ப்பதற்கு நடவடிக்கை

மோசடியை தவிர்ப்பதற்கு நடவடிக்கை

அட்டை மோசடியை தவிர்ப்பதற்கு தங்களது விருப்பத்திற்கு ஏற்ப சேவை நிறுத்தித் தொடங்கலாம். அதேபோல் பிஓஎஸ் அல்லது ஏடிஎம் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ள விரும்பவில்லை என்றால் ஆன்லைன் பரிவர்த்தனை மட்டும் ஆன் செய்து கொள்ளலாம். தேவைக்கேற்ப அனைத்து ஏற்பாடுகளையும் ஆன் செய்து முடக்கலாம்.

ஆன் ஆஃப் செய்வதற்கான வழிமுறைகள்

ஆன் ஆஃப் செய்வதற்கான வழிமுறைகள்

மொபைல் அல்லது நெட்பேக்கிங்கிற்குள் உள்நுழைய வேண்டும் அதனுள் சென்று கார்டுகள் தேர்வு செய்ய வேண்டும் அதில் மேனேஜ் கார்ட்ஸ் என தேர்வை கிளிக் செய்ய வேண்டும். இந்த பிரிவில் உள்நாடு மற்றும் சர்வதேச போன்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல் இந்த பிரிவில் பரிவர்த்தனையை தேர்வு செய்து ஆன் ஆஃப் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
RBI Announced New Transaction Rules for Debit and Credit Users Changed From Today

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X