வெண்டிங் மிஷன் மூலம் இலவசமாக முகக் கவசம்.! பொது இடங்களில்.! எந்த நாட்டில் தெரியுமா?
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது,குறிப்பாக இதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. பின்பு பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 87பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 2,206ல் இருந்து 2,293 ஆக நேற்று உயர்வடைந்து
இருந்தது. பின்பு 22ஆயிரத்து 543 பேர் குணமடைந்தும், 46 ஆயிரத்து 8 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 67 ஆயிரத்து 152ல் இருந்து 70 ஆயிரத்து 756 ஆக உயர்வடைந்து
இருந்தது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் 40 லட்சம் பேரை பாதித்துள்ளது. சுமார்2லட்சத்துக்கும் அதிகமான மக்களை கொன்றுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறுநாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன.

இந்நிலையில் சிங்கப்பூர் மக்கள் இலவசமாக முகக்கவசங்களை பெறும் வகையில் பிரபல நிறுவனம் வெண்டிங் மெஷினைவைக்க திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளர், எனவே ஊரடங்குஅமல்படுத்தப்பட்டு பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும்; ஜூன் 1-ம் தேதி முதல்அங்கு அத்தியாவசிய தேவைகளுக்காக ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது .

இதையடுத்து விளையாட்டு பொருட்களை உருவாக்கும் பிரபல ரேசர் நிறுவனம் ஆனது தற்போது கொரோனாவால் முகக்கவசங்களை தயார் செய்து வரும் நிலையில், அதனை மக்கள் இலவசமாக பெறும் வகையில்,திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தசேவை மால்கள் மற்றும் தொழிற்சாலைகளில் முகக்கவசங்களை பெறுவதற்காக வெண்டிங் மெஷினை வைத்துள்ளது.

இந்த இயந்திரங்கள் மூலம் முதற்கட்டமாக 50லட்சம் முகக்கவசங்களை இலவசமாக வழங்க உள்ளதாக அந்தநிறுவனத்தின் சிஇஒ மிக் லியாங் டன் தெரிவித்துள்ளார். இதே போன்று அனைத்து இடங்களிலும் கிடைத்தால்நல்ல வரவேற்ப்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications