Home
News

உலகின் முதல் விமானியே ராவணன் தான்-கர்ஜிக்கும் இலங்கை.!

ராவணன் இலங்கையை ஆண்ட மன்னன். இவர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே விமானங்களையும் இயங்கியதாக கூறப்படுகின்றது. இது உண்மை தான் என்று இந்திய வரலாற்று ஆய்வாளர்களும் கூறி வரும் நிலையில், உலகின் முதல் விமானியே ராவணன் தான் என்று இலங்கை கர்ஜித்துள்ளது.

இலங்கை தரப்பில் செய்தி

இலங்கை தரப்பில் செய்தி

பழமையான இதிகாச கதையாக இருந்தாலும் பழங்காலத்தில் விமானம் எப்படி இருந்திக்கக்கூடும் எனக் கேள்வி எழாமல் இல்லை. அதன் தொடர்ச்சியாக, உலகின் முதல் விமானியே இராவணன் தான் என இலங்கை தரப்பில் வெளியான செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 5,000 ஆண்டுகளுக்கு முன்

5,000 ஆண்டுகளுக்கு முன்

பறந்து சென்ற இராவணன் தான் உலகின் முதல் விமானி என இலங்கை அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் பழங்காலத்தில் பறந்து சென்ற முறை குறித்து ஆய்வையும் மேற்கொள்ள இருப்பதாக செய்திகளில் வெளியாகியது.

இராவணன் முன்னோடி என்பதையும்

இராவணன் முன்னோடி என்பதையும்

இராவணன் முன்னோடி என்பதையும் அவர் பறந்து செல்ல விமானத்தை பயன்படுத்தியது குறித்து மறுக்க முடியாத உண்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது. அரசர் இராவணன் ஓர் மேதையாவர். முதன் முதலில் பறந்த மனிதர் அவரே. அவர் ஒரு விமானி ஆவார். இது கட்டுக்கதை அல்ல. இதுவே உண்மை. இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாங்கள் அதனை நிரூபிப்போம் " என கொழும்புவின் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி-யின் துணை தலைவர் சாஷி தனடுங்கே நியூஸ் 18 செய்திக்கு பதில் அளித்து இருக்கிறார்.

இது கட்டுக்கதை அல்ல

இதுவே உண்மை. இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாங்கள் அதனை நிரூபிப்போம் " என கொழும்புவின் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டி-யின் துணை தலைவர் சாஷி தனடுங்கே நியூஸ் 18 செய்திக்கு பதில் அளித்து இருக்கிறார்.

இது தொடர்பான கூட்டமானது

இது தொடர்பான கூட்டமானது

இலங்கையின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் பண்டாரநாயக்கா அமைந்துள்ள கட்டுநாயக்காவில் நடந்தது. இதில், சிவில் ஏவியேஷன் வல்லுநர்கள், வரலாற்றாசிரியர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அணு ஆயுதங்கள், தொழில் நுட்பங்களும்

அணு ஆயுதங்கள், தொழில் நுட்பங்களும்

ராமாயண காலத்தை நாம் அனைவரும் கற்பனை கதையாக எண்ணி வந்தோம். ஆனால் இன்று அதில் இருந்து வெளிப்பட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள் உலகையே அதிர விட்டுள்ளது. இதை வைத்து பார்கையில், ராமயாணத்தில் பல்வேறு அணு ஆயுதங்கள், தொழில் நுட்பங்களும், பிரம்மா அஸ்திரம் எனப்படும் அணு குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தை பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளில் வெளிநாட்டு ஆய்வாளர்களும் உறுதிபடுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராவணன் பயன்படுத்தி 24 அதி நவீன விமானங்கள் மற்றும் விமான தளங்கள் பற்றி ஆய்வாளர் ஒருவர் விளக்கி கூறியுள்ளார்.

ராவணன்

ராவணன்

பத்து தலைகளுடன் இருப்பதாவே சித்தகரிக்கப்பட்டுள்ளது. பத்து தலைகளும் 10 துறைகளில் ராவணன் சிறந்து விளங்கியதாக கூறப்பட்டுள்ளது. அவற்றில் அரசியல், இசை, போர் கலை, தொழில்நுட்பம், அணு ஆயுதங்கள், ஆளுமை உள்ளிட்டவைகள் அடங்குகின்றன.

ராவணனுக்கு 10 துறைகளில் சிறந்து விளங்கியதால் இதையே சிறப்பாக கூறப்பட்டுள்ளது. மேலும் ராவணன் இலங்கை சேர்ந்த தமிழ் மன்னாக இருக்கின்றார். ராவணன் ஆட்சி காலத்தில் இலங்கை பொற்காலமாக இருந்துள்ளது.

சிகிரியா மலை

சிகிரியா மலை

இலங்கை சிகிரியா மலைத் தொடர் மீது ராவணன் அமைத்து இருந்த விமான தளங்கள் இருந்தத்திற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இதை பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் குறிப்பிட்டு வருகின்றனர். புஷ்பக ரக விமானம் உள்ளிட்ட பல்வேறு விமான தளங்களை ராவணன் பயன்படுத்தியுள்ளார். மேலும், அணு ஆயுதங்களையும் அவர் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

அறிவியல் மாநாடு

அறிவியல் மாநாடு

இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்த 4 நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதில் பங்கேற்ற ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஷ்வர் ராவ் சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாட்டிற்கு முந்தையது விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்று பேசியுள்ளார்.

ஏவுகணை தொழில்நுட்பம்

ஏவுகணை தொழில்நுட்பம்

ஸ்டெம் செல் மற்றும் சோதனைக் குழாய் மூலமாக பிறந்தவர்கள் கெளரவர்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து இந்தியாவுக்கு ஞானம் அவர் பேசியுள்ளார்.

ராமரின் அஸ்திரங்கள், சாஸ்திரங்கள்

ராமரின் அஸ்திரங்கள், சாஸ்திரங்கள்

ராமர் அஸ்திரங்களையும், சாஸ்திரங்களையும் பயன்படுத்தினார். விஷ்ணு இலக்கை துரத்த சக்கர வியூக்கத்தை பயன்படுத்தினார்.

இவை இலக்கை தாக்கிய பின் மீண்டும் ஏவியவர்களிடமே வந்துவிடும் என்று ராவ் கூறி உள்ளார். "இலக்கை நோக்கி செலுத்தப்படும் ஏவுகணைகள் இந்தியாவிற்கு புதிதல்ல என்பதை இவை உணர்த்துகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவை இருந்திருப்பது தெரிகிறது,"

ராவணனிடம் 24 வகை விமானங்கள்

ராவணனிடம் 24 வகை விமானங்கள்

மேலும் அவர், ராவணனிடம், புஷ்பக விமானம் மட்டும் இல்லை. அவரிடம் பல்வேறு அளவு மற்றும் திறனில் 24 விதமான விமானங்கள் இருந்ததாக ராமாயணம் கூறுகிறது என்று விவரித்துள்ளார். அவரிடம் இலங்கையில் ஏராளமான விமானங்கள் இருந்ததாகவும் கூறி உள்ளார்.

மச்ச அவதாரம்

மச்ச அவதாரம்

உயிரின் தோற்றம் நீரில் தொடங்கியதாக டார்வின் கூறுகிறார். விஷ்ணுவின் முதல் அவதாரமும் நீரில்தான் தொடங்கி உள்ளது. அதாவது மச்ச அவதாரம் என்று பரிணாம கோட்பாட்டை விஷ்ணுவுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார்.

சோதனை குழாய் குழந்தைகள்

சோதனை குழாய் குழந்தைகள்

மகாபாரதத்தை அறிவியலுடன் ஒப்பிட்டு பேசிய அவர், "காந்தாரிக்கு எப்படி நூறு பிள்ளைகள் இருக்க முடியுமென அனைவரும் வியந்தார்கள். இதனை ஒருவரும் நம்பவில்லை. ஆனால், இப்போது சோதனை குழாய் குறித்து பேசுகிறோம். மகாபாரதத்திலே இது குறித்து உள்ளது. கருத்தரித்த நூறு முட்டைகள் நூறு பானைகளில் போடப்பட்டதாக உள்ளது." என்று பேசி உள்ளார்.

1000 ஆண்டுகளுக்கு முன் சாத்தியம்

1000 ஆண்டுகளுக்கு முன் சாத்தியம்

நூறு கெளரவர்களும் ஒரு தாயிடமிருந்து பிறந்தவர்கள். இவை சோதனை குழாய் மற்றும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியால் சாத்தியமானது. ஆயிரமாண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதுதான் இந்நாட்டின் அறிவியல் என்று பேசி உள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
ravana titled worlds first aviator by srilanka : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X