ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. டிச.1 முதல் அமல்.. ஒரே நேரத்தில் 4 முக்கிய மாற்றங்கள்!
வருகிற 2205 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல், ரேஷன் கார்டு (Ration Card) மற்றும் எல்பிஜி மானியங்கள் (LPG subsidies) எவ்வாறு சரிபார்க்கப்படுகின்றன, வழங்கப்படுகின்றன மற்றும் கண்காணிக்கப்படுகின்றன என்பதில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.
இதற்காக இந்திய அரசாங்கமானது பொது விநியோக முறையின் (PDS) கீழ் - ஆதார் மறு சரிபார்ப்பு, வருமான தணிக்கைகள், நகல் ரேஷன் கார்டு நீக்கம் மற்றும் கடுமையான எல்பிஜி மானிய விதிமுறைகளில் அதிக கவனம் செலுத்தும் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிச.1 முதல் இந்திய அரசாங்கம் கொண்டு வரும் 4 புதிய மாற்றங்கள் ஆனது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வீடுகளை, குறிப்பாக மானிய விலையில் உணவு தானியங்கள் மற்றும் மலிவு விலையில் எல்பிஜி சிலிண்டர்களை நம்பியிருக்கும் குடும்பங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. அனைத்து ரேஷன் கார்டு பயனர்களுக்கும் கட்டாய ஆதார் சரிபார்ப்பு: துல்லியமான அடையாளத்தை உறுதி செய்வதற்கும், மானிய விலையில் உணவு தானியங்கள் தவறாக ஒதுக்கப்படுவதை தடுப்பதற்கும், ஒவ்வொரு ரேஷன் கார்டு வைத்திருப்பவருக்கும் ஆதார் மறு சரிபார்ப்பை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
இந்த மறு சரிபார்ப்பு இயக்கம் அனைத்து வகை ஏபிஎல் (APL), பிபிஎல் (BPL), ஏஏஒய் (AAY) மற்றும் முன்னுரிமை குடும்பங்களையும் உள்ளடக்கியது மற்றும் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்கள் ஆதாரை வெற்றிகரமாக அங்கீகரிக்க வேண்டும். காணாமல் போன ஆதார் விவரங்கள், பொருந்தாத பதிவுகள் அல்லது காலாவதியான மக்கள்தொகை தகவல்களை கொண்ட குடும்பங்கள், திருத்தங்கள் செய்யப்படும் வரை தற்காலிகமாக மதிப்பாய்வுக்காக குறிக்கப்படலாம்.
போலியான ரேஷன் அட்டை அல்லது மோசடியான ரேஷன் அட்டை பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், பயனாளி தரவுத்தளத்தின் துல்லியத்தை மேம்படுத்தவும் மற்றும் அவர்களின் தகுதியை உறுதிப்படுத்தவும் - மாநிலங்கள் ஆனது டிஜிட்டல் பதிவுகள் மற்றும் பயோமெட்ரிக் தரவை (digital records and biometric data) பயன்படுத்தும்.
ஆதார் சரிபார்ப்பை முடிக்கத் தவறும் குடும்பங்கள், தடுக்கப்பட்ட ரேஷன் கார்டு பரிவர்த்தனைகள் மற்றும் முடக்கப்பட்ட சலுகைகள் உள்ளிட்ட சேவை இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும். பல குடும்பங்களுக்கு, இது மானிய விலையில் கோதுமை, அரிசி, பருப்பு வகைகள் மற்றும் மண்ணெண்ணெய்க்கான மாதாந்திர அணுகலை பாதிக்கலாம்.
பயனாளிகள் தங்கள் நிலையை சரிபார்க்க அருகிலுள்ள ரேஷன் கடை, ஆதார் மையம் அல்லது ஆன்லைன் பிடிஎஸ் போர்ட்டலை பார்வையிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆதார் எண்ணும் செயலில் இருப்பதையும், சரியான முகவரி மற்றும் பயோமெட்ரிக் தகவல்களுடன் புதுப்பிக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி காலக்கெடுவிற்கு முன்னதாக இந்த படிகளை முடிப்பது அத்தியாவசிய உணவு பொருட்களை அணுகுவதில் தாமதத்தைத் தவிர்க்க உதவும்.
2. புதிய எல்பிஜி மானிய விதிகள் மற்றும் வங்கி சரிபார்ப்பு சோதனைகள்: டிசம்பர் 1 முதல், எல்பிஜி மானியங்கள் ஆனது ஆதார் உடன் இணைக்கப்பட்ட மற்றும் முழுமையாக சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே மாற்றப்படும். இந்த விதி உஜ்வாலா பயனாளிகளுக்கும் வழக்கமான வீட்டு நுகர்வோருக்கும் பொருந்தும்.
செயலற்ற வங்கி கணக்குகள், பொருந்தாத பெயர்கள் அல்லது முழுமையற்ற கேஒய்சி உள்ள குடும்பங்கள் விவரங்கள் சரிசெய்யப்படும் வரை மானியத் தொகையை பெறுவதில் தாமதங்களை சந்திக்க நேரிடும். மானியங்கள் உண்மையான நுகர்வோர்களை அடைவதையும் அல்லது தாமதங்கள் இல்லாமல் சென்றடைவதையும் உறுதி செய்யம் நோக்கத்தின் கீழ் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது
3. மாநில அளவிலான நகல் மற்றும் தகுதியற்ற ரேஷன் கார்டுகளை நீக்குதல்: மாவட்டங்கள் முழுவதும் நகல் அல்லது தகுதியற்ற ரேஷன் கார்டுகளை கண்டறிந்து, அவைகளை அகற்றுவதற்காக 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மாநிலங்கள் ஆனது தானியங்கி தணிக்கையை தொடங்கும்.
இந்த சோதனைகள் ஆதார் அங்கீகாரம், முகவரி தரவு மற்றும் வீட்டு விவரங்களை பயன்படுத்தி குடும்பங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்திருப்பது அல்லது பல இடங்களில் சலுகைகளைப் பெறுவது போன்ற வழக்குகளை கண்டறியும். ஒரே ஆதார் எண், ஒரே முகவரி அல்லது ஒன்றுடன் ஒன்று குடும்ப அமைப்புகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நகல் அட்டைகள் ரத்து செய்யப்படும்
மேலும் ஒரு செல்லுபடியாகும் அட்டை மட்டுமே செயலில் இருக்க அனுமதிக்கப்படும். மானிய விலையில் தானியங்கள் நியாயமான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதும், பல அட்டைகளை வைத்திருக்கும் குடும்பங்களால் ரேஷன் கார்டு செயல்முறை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதும் தான் இந்த புதிய விதியின் முக்கிய நோக்கமாகும்.
4. வருமானம், முகவரி மற்றும் குடும்ப அளவு சரிபார்ப்பு விதிகள்: புதிய சரிபார்ப்பு வழிகாட்டுதல்களின்படி, பொது விநியோக முறையின் கீழ் துல்லியமான வகைப்பாட்டை உறுதி செய்வதற்காக குடும்பங்கள் தங்கள் வருமான பதிவுகள் மற்றும் குடியிருப்பு விவரங்களையும் புதுப்பிக்க வேண்டும். காலப்போக்கில் வருமானம் அதிகரித்த குடும்பங்கள் இனி பிபிஎல் அல்லது முன்னுரிமை நிலைக்குத் தகுதி பெறாமல் போகலாம்.
மேலும் மாநிலங்கள் அதற்கேற்ப தங்கள் வகையை மறு மதிப்பீடு செய்யும். சமீபத்தில் இடம் பெயர்ந்த குடும்பங்கள் தங்கள் புதிய பகுதியில் உள்ள சரியான பொது விநியோக கடையிலிருந்து ரேஷன்களை தொடர்ந்து பெற அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தில் தங்கள் முகவரியை புதுப்பிக்க வேண்டும். இது சலுகைகள் துல்லியமாக வழங்கப்படுவதை உறுதிசெய்கிறது மற்றும் ஒரே ரேஷன் கார்டு "பல இடங்களில்" பயன்படுத்தப்படுவதை தடுக்கிறது.


Click it and Unblock the Notifications








