முதன் முதலில் கண்டுபிடித்த ஆப்பிள் கம்பியூட்டர் ரூ.2.75 கோடிக்கு ஏலம்.!
ஐப்பிள் நிறுவனத்தின் செல்போன்கள், கணிணிகள், வாட்சுகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கும் என்றும் உலகளவில் தனி மவுசுதான். இருந்தாலும் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆப்பிள்-1 கம்பியூட்டர் தற்போது,
ஐப்பிள் நிறுவனத்தின் செல்போன்கள், கணிணிகள், வாட்சுகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கும் என்றும் உலகளவில் தனி மவுசுதான். இருந்தாலும் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆப்பிள்-1 கம்பியூட்டர் தற்போது, ரூ.2.75 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

ஏலம் போன கம்பியூட்டர் தற்போது நல்ல நிலையில் இயங்கி கொண்டிருக்கின்றது. இந்த ஆப்பிள்-1 கம்பியூட்டர் உலகளவில் தற்போது பிரபலமாகியுள்ளது. மேலும் ஐப்பிள் நிறுவனத்தின் மதிப்பு மேலும் உயரந்துள்ளது.

முதல் வடிவமைப்பு:
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் இணைந்து முதன் முதலாக ஆப்பிள்-1 கம்பியூட்டரை ஏப்ரல் 1976ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தனர். இதை மையமாக வைத்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கம்பியூட்டர்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் ஏலம்:
இந்நிலையில் சீராக இயங்கும் ஆப்பிள்-1 கம்பியூட்டர் ஒன்று அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் மவுன்டெயின் வியூவில் உள்ள ஒரு கடையில் இருந்த இந்த கம்பியூட்டர் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ரூ.2.75 கோடிக்கு ஏலம்:
இதை ஆப்பிள் கம்பியூட்டர் ஆர்வலர்கள் ரூ.2 கோடியே 75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தனர். தொடக்கத்தில் இந்த கம்பியூட்டர் 666.68 அமெரிக்கா டாலர் (ரூ.48 ஆயிரம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.

200 கம்பியூட்டர் வடிவமைப்பு:
ஸ்டீவ் சுப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக்கும் இணைந்து மொத்தம் 200 ஆப்பிள்-1 கம்பியூட்டரை வடிவமைத்தனர். இவைகளில் 175 யூனிட்கள் விற்பனையாக நிலையில், தற்போது ஒன்று தான் ஏலத்தில் விற்பனையாக இருக்கின்றது.

பழுது சரிசெய்யப்பட்டது:
இந்த கம்பியூட்டர் 2018 ஜூன்னில் மீண்டும் சீராக இயங்கும் நிலைக்கு சரி செய்யப்பட்டது. இந்த பணியினை ஆப்பிள் 1 வல்லுநரான கோரி கோஹென் மேற்கொண்டார். தற்சமயம் ஏலத்தில் விற்பனையாகி இருக்கும். ஆப்பிள் 1 கம்பியூட்டர் சீராக வேலை செய்து குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications