இந்தியாவை பாதிக்காத ரேன்சம்வேர் தாக்குதல் ஏன் என்று சொன்னால் கேவலம்.!
ரேன்சம்வேர் இணைய தாக்குதல் : பைரட் மென்பொருள்கள்.!
ரேன்சம்வேர் இணைய தாக்குதல் பொருத்தவரை உலகநாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்தியாவில் குறைந்த ஆளவு பாதிப்பு தான் ஏறப்பட்டுள்ளது, இதற்க்கு காரணம் இந்தியாவில் உள்ள மென்பொருள் போதிய அளவு மேம்படுத்தப்படவில்லை மேலும் ஏடிஎம் போன்ற சேவைகளில் போதிய அப்டேட் செய்யப்படவில்லை என்பது தான் முக்கிய காரணம்.
இந்நிலையில் இந்த ரேன்சம்வேர் வைரஸ் மூலம் நாடு முழுவதும் சைபர் கிரைம் மூலம் தாக்குதல் நடத்தியது வடகொரியாதான் என தெரியவந்துள்ளது. இதனை அமெரிக்காவின் கேஸ்பர்ஸ்கி உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன. மேலும் பல மில்லியன் அளிவிற்க்கு வருமானம் இழந்துள்ளது அமெரிக்கா.

ஆராய்ச்சியாளர்கள்:
சைமென்டெக் மற்றும் காஸ்பர்ஸ்கி ஆய்வகம் திங்களன்று அறிவித்த அறிக்கையில் மென்பொருளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளன. மேலும் மென்பொருள் தொழில்நுட்பம் மிகுந்தபாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது, பல நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் இது வடகொரியாவின் ஹேக்கிங் நடவடிக்கை அறிவித்துள்ளனர்.

பைரட் மென்பொருள்கள்:
இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படுவது பைரட் மென்பொருள்கள் இவற்றின் தரம் மிகவும் குறைவாகவே உள்ளது. என்று பல செய்திகள் வெளியாகி உள்ளன. இதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

அரசாங்க துறை:
தற்போது இந்தியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் போதிய புது இயந்திரங்கள் மற்றும் புதிய மென்பொருள்கள் பயன்படுத்தப்படவில்லை. இதனால் பெரும்பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் அத்தகைய இணைய அச்சுறுத்தல்களுக்கு இந்திய பயப்படவில்லை.

கூகுள்:
கூகுள் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான நீல் மெஹ்தா அவரது ட்விட்டரில் சில சான்றுகளை வெளியிட்டுள்ளார், அவர் ட்விட்டர் பக்கத்தில் வடகொரியா ரேன்சம்வேர் தாக்குதல் திட்டமிட்டு நடத்தியுள்ளது, மேலும் கணினி ஹேக்கிங் அதிகமாய் செய்யப்பட்டுள்ளது என அறிவத்திருந்தார்.

தனியார் நிறுவனங்கள் :
ரேன்சம்வேர் இணைய தாக்குதல் பொருத்தமாட்டில் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏறப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மக்களின் வருமானம் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ரேன்சம்வேர் வைரஸ்:
இது ஒரு கணினியிலிருந்து அதனுடன் இணைக்கப்பட்டுள்ள (நெட்வொர்க்) மற்ற கணினிகளுக்கு பரவி வருகிறது. இதுதவிர மின்னஞ்சல் மூலமும் பரவுகிறது. இவ்வாறு பரவுவதைத் தடுக்க உரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த வைரஸிலிருந்து விடுபடுவதற்கு ரொக்கம் செலுத்துமாறு கோரினால் அதை ஏற்க வேண்டாம் என பல அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

சைபர் செக்யூரிட்டி:
தற்போது குறைந்த வேகத்திலேயே செயல்பட்டுவரும் ரேன்சம் வேர் தாக்குதல், விரைவில் புதிய அச்சுறுத்துல்களுடன் விரைந்து தாக்கும் என சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications