பேஸ்புக்ல லைக்கு, டுவிட்டர்ல பாலோவர்ஸ் இருந்தா தான் இனி காங்கிரஸ் கட்சியில சீட்.!
நாடும், நாட்டு மக்களும் வளமும், வெற்றியும் பெறவேண்டி சிவனின் அருள் பெறுவதற்காக அவர் யாத்திரை சென்றிருப்பதாகவும், இதற்கு 12 நாட்கள் வரை ஆகும் எனவும் காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜெவாலா
ராகுல்காந்தி கைலாய மலையாத்திரை தொடர்பாக டுவிட்டரில் காத்மண்டு அடைந்து விட்டேன் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிவ பக்தர் என கூறப்படுகிறது.

அவர் டெல்லியில் இருந்து சிவனின் உறைவிடமாக கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு யாத்திரையாக புறப்பட்டார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் இப்படி எல்லாம் செய்தால் தான் தேர்தலில் சீட் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

12 நாள் சுற்றுப்பயணம்:
நாடும், நாட்டு மக்களும் வளமும், வெற்றியும் பெறவேண்டி சிவனின் அருள் பெறுவதற்காக அவர் யாத்திரை சென்றிருப்பதாகவும், இதற்கு 12 நாட்கள் வரை ஆகும் எனவும் காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜெவாலா கூறினார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் செல்லும் வழித்தடம் குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ராகுல் விமானம் சாய்ந்த விவகாரம்:
ராகுல்காந்தி கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி கர்நாடக தேர்தல் பிரசாரத்துக்காக விமானம் மூலம் சென்றபோது விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டு ஒரு பக்கமாக சாய்ந்து செங்குத்தாக கீழே இறங்கியது. சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு விமானம் சீராக சென்று பாதுகாப்பாக தரையிறங்கியது.

கைலாய மலைக்கு செல்வதாக அறிவிப்பு:
3 நாட்கள் கழித்து ராகுல் காந்தி கைலாய மலைக்கு யாத்திரை செல்ல இருப்பதாக அறிவித்தார். எனவே அவர் விமான விபத்தில் இருந்து உயிர்தப்பியதற்கு பரிகாரமாக சென்றிருக்கலாம் எனவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
டுவீட் செய்த ராகுல் காந்தி:
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில், கைலாய மலை யாத்திரை சென்றடைய முதற்கட்டமாக காத்மண்டு வந்து அடைந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

ஆட்சியை பிடிக்க வேண்டும்:
விமான விபத்து இருந்து தப்பியது. ஆட்சியை பிடித்து பிரதர் ஆக வேண்டியும் ராகுல் காந்தி சிவனை தரிசிக்க சென்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த செய்தி இந்திய அரசியலில் பெரும் பரபரப்பாக பார்க்கப்படுகின்றது.
காங்கிரஸ் கட்சி சீட்டுக்கு இதுஎல்லாம் பண்ணணும்
இந்நிலையில், இந்த ஆண்டுகான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று ஒரு செய்திகுறிப்பு வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களது பேஸ்புக் பக்கத்தில் சுமார் 15 ஆயிரம் லைக், டுவிட்டரில் 5 ஆயிரம் அபிமானிகளையும் (Followers) பெற்றிருக்க வேண்டும் என்றும், அனைத்து வாக்குச்சாவடிகள் மட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினரின் ‘வாட்ஸ்அப்' குழுக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
அனைத்துக்கும் மேலாக, மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் அனைத்து பதிவுகளையும் ‘லைக்' மற்றும் ‘ரிடுவீட்' செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications