இந்தியாவில் மீண்டும் அதிகாரப்பூர்வமாகக் களமிறங்கும் PUBG கேம்.. ஆனால் பெயர் தான் வேற..
கிராப்டான் இன்க் நிறுவனம் பப்ஜி கேமை இந்தியாவில் வேறு ஒரு புதிய பெயருடன் புது பொலிவுடன் அறிமுகம் செய்ய தயாராகிவிட்டதாகத் தெரிவித்துள்ளது. இதன் படி இந்தியாவில் பப்ஜி கேம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா என்ற பெயரில் வெளியாக ரெடியாக இருக்கும் புதிய கேம் பப்ஜி மொபைல் கேமின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

இந்த கேம் பிரத்தியேக இன்-கேம் ஈவென்ட்களான அவுட்பிட்களை கொண்டிருக்கும். இத்துடன் டோர்னமென்ட் மற்றும் லீக் எனப் பல சுற்றுக்களைக் கொண்டிருக்கும். பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா பிரீமியம், AAA மல்டிபிளேயர் கேமிங் அனுபவத்துடன், ஏராளமான புதிய ஆடை ஸ்கின்கள் மற்றும் அம்சங்கள் போன்ற பிரத்தியேக விளையாட்டு நிகழ்வுகளுடன் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமின் சரியான அறிமுக வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, நிறுவனம் டீசரை வெளியிட்டுள்ளது.
நாட்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுவதற்கு முன்னர் இந்த விளையாட்டு முன் பதிவுகளுக்குக் கிடைக்கும், கிராப்டன் கூறினார். இந்த விளையாட்டு ஒரு இந்தியா பிரத்தியேகமாகவும், கருப்பொருளைப் பின்பற்றவும், இந்திய மொபைல் விளையாட்டாளர்களை ஈர்க்க மூன்று வண்ணத் திட்டத்தைக் கொண்டிருக்கும். நிறுவனம் விளையாட்டு உள்ளடக்கத்தைத் தவறாமல் கொண்டு வரும் என்றும், தொடக்கத்தில் இந்தியாவின் குறிப்பிட்ட விளையாட்டு நிகழ்வுகளின் தொடக்கம் தொடங்கி, பின்னர் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் முந்தைய அறிவிப்பு போல் கேம் முற்றிலும் வெளிப்படையானதாக இருக்கும் என்று நிறுவனம் கூறியது, அனைத்து தரவு சேகரிப்பு மற்றும் சேமிப்பு தகவல்கள் அனைத்தும் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு மொபைல் இந்தியா முழுமையாக இணக்கமாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த கேம் இந்தியாவுக்கென பிரத்தியேகமானதாக இருக்கும். வெளியீட்டைத் தொடர்ந்து இந்த கேமிற்கான அறிமுக நிகழ்வு நடைபெற இருக்கிறது. இதில் கேம் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றது.
ஆரம்பத்தில் தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பப்ஜி, பிற சந்தைகளின் விரிவாக்க நடவடிக்கையாக பப்ஜி விளையாட்டை சீன நிறுவனமான டென்சென்ட் வாங்கியது. உலகின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியா, பப்ஜியில் அதிக பயனர்களை கொண்ட நாடாக இருந்தது. தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பப்ஜி, சீன நிறுவனமான டென்செண்ட் கேம்ஸ் பங்குகளை கொண்டுள்ளதால் இந்தியாவில் தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்திய அரசின் நடவடிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் இனி இந்தியாவில் சீனாவின் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாது என தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேஷன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications