உலகளவில் இரண்டாம் இடம் பிடித்தார் மோடி..!!
மீண்டும் ஓர் உலக சாதனை படைத்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை பயன்படுத்தி வரும் மோடியை ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்திருக்கின்றது.

அதிகம்
சுமார் இரு மாதங்களில் 10 லட்சம் பேர் பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் பின்பற்றியுள்ளனர்.

செப்டம்பர்
செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியில் 15 மில்லியன் பேர் மோடியை ட்விட்டரில் பின் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பு
2014 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி பிரதமர் பதவியில் பொறுப்பேற்ற பின் சுமார் 11.9 மில்லியன் பேர் மோடியை பின் தொடர்ந்திருக்கின்றனர்.

ட்விட்டர்
2009 ஆம் ஆண்டு முதல் ட்விட்டர் பயன்படுத்தி வரும் மோடி உலகில் அதிகம் பின்பற்றப்படும் தலைவர்களில் இரண்டாம் இடம் பிடித்திருக்கின்றார்.

ஃபாளோவர்கள்
தற்சமயம் ட்வட்டரில் நரேந்திர மோடியை சுமார் 16.1 மில்லியன் பேர் பின்பற்றி வருகின்றனர்.

முதலிடம்
66.1 மில்லியன் ஃபாளோவர்களுடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தில் இருக்கின்றார்.

சாதனை
செப்டம்பர் 17, 2014 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 17, 2015 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிக ஃபாளோவர்களை கொண்ட எண்ணிக்கையிலும் பிரதமர் மோடி சாதனை புரிந்திருக்கின்றார். இந்த காலக்கட்டத்தில் சுமார் 8.8 மில்லியன் பேர் புதிதாக மோடியை பின்பற்றியிருக்கின்றனர்.

இந்தியா
இந்தியாவை பொருத்த வரை ட்விட்டரில் அதிக ஃபாளோவர்களை கொண்டிருப்போர் பட்டியலில் மோடி மூன்றாம் இடத்தில் இருக்கின்றார்.

முதலிடம்
இந்தியாவில் அதிக ட்விட்டர் ஃபாளோவர்களை அமிதாப் பச்சன் 17.8 மில்லியன் ஃபாளோவர்களும், ஷாருக் கான் 16.2 மில்லியன் ஃபாளோவர்களையும் பெற்று முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications