கவனம் SBI வாடிக்கையாளர்களே.. 50 கோடி பயனர்களுக்கு ஆபத்து.. அரசாங்கமே கொடுத்த எச்சரிக்கை.. இதை செய்யாதீங்க..
இந்தியாவில் உள்ள 50 கோடிக்கும் மேற்பட்ட எஸ்பிஐ (SBI) வங்கி பயனர்களுக்கு இந்திய அரசாங்கம் புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. உங்களிடம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank Of India) வங்கியில் கணக்கு இருக்கிறதென்றால், கட்டாயமாக இந்த பதிவு உங்களுக்கானது தான். உங்கள் கணக்கில் இருக்கும் பணம் திருடப்படாமல் இருக்க, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விபரங்களை இப்போது பார்க்கலாம். இந்தியாவில் தற்போது புதிய வகை ஸ்கேம் மூலம் SBI வங்கி வாடிக்கையாளர்களின் பணம் திருடப்படுகிறது. இதில் நீங்கள் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்பது இங்கே.
இந்தியாவை பொறுத்த வரையில், எஸ்பிஐ (SBI) வங்கி சுமார் 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட இந்தியாவின் மிக பெரிய வங்கி சேவையாக செயல்பட்டு வருகிறது. எஸ்பிஐ (SBI) வங்கி வங்கி இந்தியா முழுக்க 22500 கிளைகளை இயக்கி வருகிறது. இந்தியாவின் பட்டிதொட்டி எல்லா பக்கமும் எஸ்பிஐ (SBI) வங்கி சுமார் 63580 ATM மையங்கள் மற்றும் ADWM கிளைகளை கொண்டுள்ளது மற்றும் 82900 BC அவுட்லெட்களை கொண்டுள்ளது.

50 கோடி SBI பயனர்களுக்கு ஆபத்து.. கவனம் SBI வாடிக்கையாளர்களே:
இந்தியாவில் இப்போது எஸ்பிஐ (SBI) வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து தாக்கப்படும் ஒரு மோசடி பெரியளவில் நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான பிஐபி (PIB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ (Press Information Bureau) தகவலின் படி, இந்தியன் ஸ்டேட் பேங்க் (எஸ்.பி.ஐ) வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு ரிவார்டு பாயிண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய மோசடியை மோசடிக்காரர்கள் அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.
புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், இந்த புதிய மோசடி, "எஸ்பிஐ வெகுமதிகளை" வழங்குவதாக கூறி, வஞ்சகமான செய்திகளை அனுப்பி, பயனர்களை வஞ்சகமான பயன்பாட்டை பதிவிறக்கச் செய்ய வற்புறுத்துகிறார்கள். பி.ஐ.பி.யின் எச்சரிக்கை சைபர் மோசடி அதிகரித்து வரும் இக்கட்டான சூழலில் வெளிவந்துள்ளது. மோசடி செய்பவர்கள் தங்கள் முறைகளை மேம்படுத்தி, நம்பகமானதாக தோன்றும் வகையில் மாற்றி வருகிறார்கள்.
அவர்கள் பெரும்பாலும் எஸ்.பி.ஐ.யின் நற்பெயரையும் பிராண்டிங்கையும் பயன்படுத்தி, நம்பகமான சேவைகளை மிகவும் நெருக்கமாகப் பிரதிபலிக்கும் போலி வலைத்தளங்கள் அல்லது பயன்பாடுகளை உருவாக்குகிறார்கள். இந்த போலி தளங்களை அசல் தளம் என நம்பி, பல SBI வாடிக்கையாளர்கள் அறியாமல் அதிகமாக மோசடி வலையில் சிக்கி பாதிக்கப்படுகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில் இத்தகைய ஆன்லைன் மோசடியில் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உண்மையான எஸ்பிஐ ரிவார்டு நன்மையை எப்படி பெறுவது? எது பாதுகாப்பானது?
இந்த பிரச்சனையை எதிர்கொள்ள, அரசாங்கமும் சைபர் பாதுகாப்பு நிபுணர்களும் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்து ஆன்லைன் வங்கி பயனர்களும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். குறிப்பாக SBI ரிவார்டுகளை வழங்குவதாக கூறும், அறியப்படாத ஆதாரங்களில் இருந்து இணைப்புகளைக் கிளிக் செய்து, பைல்களை பதிவிறக்க கூறி, பயனர்களின் தரவுடன் பணத்தை திருடுகிறது.
Google Play Store அல்லது Apple App Store போன்ற நம்பகமான தளங்களிலிருந்து மட்டுமே எஸ்.பி.ஐ. தொடர்பான பயன்பாடுகளை நிறுவ வேண்டும் என்று வங்கியும், அரசாங்கமும் எச்சரித்துள்ளது. அதிகாரப்பூர்வமான SBI ரிவார்டுகளை பெற, வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ எஸ்.பி.ஐ. ரீவார்ட்ஸ் வலைத்தளத்தில் (https://www.rewardz.sbi/) பயன்படுத்த வேண்டும் அல்லது 1800-209-8500 என்ற எண்ணில் சரிபார்க்கப்பட்ட எஸ்.பி.ஐ. ரீவார்ட்ஸ் வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications