மனைவியின் ஆபாச படங்களை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்த கடற்படை தளபதி.!
ஆபாசப் படங்களுக்கு அடிமையாகிய இந்திய கடற்படை தளபதி, தனது மனைவியின் ஆபாச படங்களை ஆன்லைன் இல் பதிவேற்றம் செய்துள்ளார்.
ஆபாசப் படங்களுக்கு அடிமையாகிய இந்திய கடற்படை தளபதி, தனது மனைவியின் ஆபாச படங்களை ஆன்லைன் இல் பதிவேற்றம் செய்துள்ளார்.

அவரின் மனைவி மட்டுமின்றி தனது சக நண்பர் மனைவிகளின் ஆபாசப் படங்களை ஆன்லைன் இல் மார்பிங் செய்து மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக புனே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கடற்படையில் தளபதி
புனே: இந்திய கடற்படையில் தளபதியாகப் பணிபுரியும் 39 வயது தக்க நபர் (பெயர் குறிப்பிடவில்லை), அன்மையில் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய் அன்று அவரின் மனைவி கொடுத்த புகாரின் பெயரில் புனே போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

ஆபாசப் படங்களுக்கு அடிமை
ஆபாசப் படங்களை பார்த்து அதற்கு அடிமையாகிப் போன கடற்படை தளபதியை, அந்த தீய பழக்கத்திலிருந்து வெளிவரும்படி அறிவுறுத்தியுள்ளார் அவரின் மனைவி. பல முறை முயற்சித்தும் குடும்பத்தினர் பேச்சை கேட்காததினால், இருவரின் திருமண வாழ்க்கையும் விவகாரத்தில் முடிந்துள்ளது.

கணவரின் மொபைல் போன்
பல முறை முயற்சித்தும் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளாத கடற்படை அதிகாரியை விட்டுப் பிரிந்து, தனது குழந்தைகளுடன் அவரின் மனைவி பெற்றோருடன் வசித்து வந்திருக்கிறார். பிரிந்து செல்லும்பொழுது தனது கணவரின் மொபைல் போனை தன்னுடன் எடுத்துவந்துள்ளார் அவரின் மனைவி.

ஆன்லைன் மொபைல் செயலி
கணவரின் மொபைல் போனை சோதித்துப் பார்த்த மனைவி, தனது நிர்வாண புகைப்படங்களை ஆன்லைன் மொபைல் செயலியில் கண்டு அதிர்ந்துபோனார். அவரின் புகைப்படங்கள் மற்றுமில்லாமல் தனது கணவருடன் வேலைபார்க்கும் சக நண்பர்களின் மனைவி புகைப்படங்களையும் மார்பிங் செய்து ஆன்லைன் இல் பதிவேற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கைது
கடற்படை தளபதி தனது ஈமெயில் ஐ.டி மூலம் ஆன்லைன் மொபைல் போட்டோ செயலில் பதிவேற்றம் செய்துள்ளார். கடற்படை தளபதியின் மனைவி முன்னாள் இராணுவ அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. தகவல் மற்றும் தொழில்நுட்ப இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடற்படை தளபதி கைது செய்யப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications