இந்துக்களை அவமதிக்கும் வகையில் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்: சிவசேனா புகார்.!
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பல்வேறு தொடர்கள், டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை பார்க்க முடியும், குறிப்பாக இந்த தளத்தை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும்.

குறிப்பாக இந்நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இந்நிலையில் அன்மையில்வெளியான டெய்லா இணைய தொடரில் இந்துக்களை அவமதித்துள்ளதாக மும்பை காவல் ஆணையரிடம்
சிவனோவின் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் ரமேஷ் சோலன்கி புகார் மன அளித்துள்ளார்.

சேகர்ட்ஸ கௌல், லெய்லா ஆகிய இணைய தொடர்கள் அனைத்து இந்துக்கள் மற்றும் இந்தியாவை அவமதிப்பதாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மகாரஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்டனாவிஸிற்கும் அவர் புகார் மனுவை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெட்ஃப்ளிக் நிறுவனத்திற்கு எதிராக சிவசேனா புகார் அளிக்கும் அளவிற்கு லெய்லா இணையத் தொடரில்என்ன இடம்பெற்றுள்ளது என்று பார்ப்போம், மதவாத ஆட்சி தொடரும் பட்சத்தில் 2047-ம் ஆண்டு இந்தியா எப்படி இருக்கும் என்ற கற்பனையில் ஷங்கர் ராமென், தீபா மேத்தா, பவன் குமார் ஆகியோர் இயக்கிய லெய்லா என்னும் இணைய தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்.

இந்த தொடர் பத்திரிகையளாளரான பிரயாக் அக்பர் எழுதிய லெய்லா நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது ஆகும், பின்பு ஷாலின் கதாபாத்திரத்தில் ஹுமா குரேஷி, ரிஸ்வானாக ராகுல் கன்னா, பானுவாக சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

லெய்லா என்ற பெயர் ஆர்யவரத்தம் என மாற்றப்பட்டு அங்கு சாதிய மதவாத ராணுவ ஆட்சி நடைபெறுவதாகக்காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக கலப்பு திருமணம் செய்துகொள்பவர்களை நகரப் பகுதியைவிட்டு வெளியேற்றி குடிசை பகுதிகளுக்குள் அனுப்பிவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இதில் குடிசைப் பகுதி உயர் சாதியினரின் குப்பைக் கிடங்காக இருக்கும், நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசடைந்த ஆர்யவர்த்தத்தில் ஜோஷி என்பவன் தான் தலைவன். இந்த ஆட்சியின் கீழ் இந்துவான ஷாலினியும் முஸ்லிமான ரிஸ்வானும் காதலித்து திருமணம் செய்து வாழ்கின்றனர் எனக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பின்பு ஷாலினி மற்றும் ரிஸ்வானுக்கும் லெய்லா என்ற பெண் குழந்தை பிறக்கிறது. இந்நிலையில் ஒருநாள்நீரை வீணாக்கியதாகக் கூறி ரிஸ்வானை மர்ம கும்பல் ஒன்று அடித்துக்கொன்றுவிட்டு அவரது மனைவிஷாலினையை தூய்மைப்படுத்துவதற்காக அரசு நடத்தும் காப்பகத்தில் சேர்த்துவிடுவார்கள், அங்கு பெண்களின்உடல்களில் வேறு சாதியனரின் இரத்தம் கலந்திருக்கிறதா என நவீன கருவிகள் மூலம் பரிசோதித்து அவர்களைதூய்மைப்படுத்த முயற்சிகள் நடக்கும் எனக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பின்பு ஆர்யவர்தம் எங்கிலும் ஜெய் ஆர்யவர்த் என்ற முழக்கமே ஒலிக்கும், இத்தகைய சூழலில் தனது மகளானலெய்லாவை ஷாலினி தேடுவது தான் நெட்ஃபிள்க்ஸ் கதை. இந்த கதையை எதிர்த்து தான் காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளது சிவசேனா.


Click it and Unblock the Notifications