கால் டிராப் பிரச்னையில் சிக்கியுள்ளார் பிரதமர் மோடி.!
இந்திய பிரதமரான நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றார். மேலும் அரசின் செயல் திட்டங்களையும், அயல் நாட்டினருடம் அவ்வபோது தனிப்பட்ட
இந்திய பிரதமரான நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றார். மேலும் அரசின் செயல் திட்டங்களையும், அயல் நாட்டினருடம் அவ்வபோது தனிப்பட்ட முறையில் பேசி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி கால் டிராப் பிரச்னையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த செய்தியால் தற்போது பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது.

பிரதருக்கு பிரச்னை:
போனில் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென தொடர்பு துண்டிக்கப்பவதை கால் டிராப் என்று சொல்கின்றனர். இந்த பிரச்னை போனில் பேசும் சாமானியர் முதல் பிரதமர் மோடி வரை இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்:
பிரதமர் மோடி செல்லி விமான நிலையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ இலத்திற்கு செல்வதற்குள் அடிக்கடி தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி பல்வேறு துறை அதிகாரிகளுடன் கால் டிராப் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு தொலைத்தொடர்பு துறை செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

வசூலாகும் கட்டணம்:
கால் டிராப் பிரச்னைக்காக தொலை தொடர்பு நிறுவனங்களிடம் வசூலான அபராதம் பற்றியும் கேட்டறிந்துள்ளார். முறையான சேவை வழங்காத தொலைதொடர்ப்பு நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் வகையில் டிராய் வதிமுறைமுறைகளை வகுத்துள்ளது.

மோடியிடம் தெரிவிப்பு:
அபராதம் விதிக்கும் விதிமுறைகளை தொலைபேசி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதையும் தொலை தொடர்புத்துறை செயலாளர் பிரதமரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications