Home
News

கார்த்திகை நட்சத்திரத்தில் வாழும் ஏலியன்கள்: அவர்கள் பேசுவது தமிழ் மொழி.!

பிளையடீஸ் எனப்படும் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏலியன் (வேற்றுகிரக வாசிகள்) வாழ்கின்றனர். அவர்கள் பூமியில் நிலவும் பல்வேறு பிரச்னைகளையும் தீர்வு கண்டு வருவதாக கூறப்படுகின்றது. அந்த ஏலியன்கள் பேசு

பிளையடீஸ் எனப்படும் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏலியன் (வேற்றுகிரக வாசிகள்) வாழ்கின்றனர். அவர்கள் பூமியில் நிலவும் பல்வேறு பிரச்னைகளையும் தீர்வு கண்டு வருவதாக கூறப்படுகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தில் வாழும் ஏலியன்கள்: அவர்கள் பேசுவது தமிழ் மொழ

அந்த ஏலியன்கள் பேசும் மொழியே தமிழாக இருக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்களும் கூறி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் காலியரும் ஏலியன்கள் பேச்சு மொழி தமிழ் தான் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் மொழியானது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி என்று நம் முன்னோர்களும், தமிழ் அறிஞர் பெரு மக்களும் கூறி வருகின்றனர்.

தமிழ்:

தமிழ்:

தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகளில் எழுதப்பெற்றவைகளாகும்.

95 சதவீதம் கல்வெட்டு:

95 சதவீதம் கல்வெட்டு:

இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.

முதன்மை மொழி:

முதன்மை மொழி:

தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.

பிராமியிலிருந்து தோன்றியது தற்போதைய தமிழ்:

பிராமியிலிருந்து தோன்றியது தற்போதைய தமிழ்:

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துகள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியிலிருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.

 தமிழை தோற்று வித்தது யார்:

தமிழை தோற்று வித்தது யார்:

தமிழை முதன் முதலில் தோற்றுவித்தது கடவுள் சிவ பெருமான் ஆவாரார். சிவபெருமானிடம் இருந்து பிரிந்த விந்தணுக்கள் ஆறு கணுக்களாக விழுந்தன. அவைகளில் இருந்து ஆறு குழந்தைகள் தோன்றின. அந்த குழந்தைகளை 6 கார்த்திகை பெண்கள் வளர்த்தன. பிறகு, முருகன் என்று உருவெடுத்தால், அவர் தமிழக்கு உரிதான கடவுளாக பார்க்கப்படுகின்றார்.
அந்த 6 கார்த்தி பெண்கள் இருந்த இடமே பிளையடீஸ் என்பபடுகின்றது.

ஏலியன்கள்:

ஏலியன்கள்:

ஏலியன்கள் உலகில் தமிழை தவிர்த்து பல்வேறு மொழிகள் தோன்றக் காரணமாக இருந்துள்ளனர். இவர்கள் உலகில் நிகழும் மாற்றங்களுக்கும், அறிவியல் வளர்ச்சிகளுக்கும் தொழில் நுட்பத்திற்கும் காரணமாகவும் இருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. இவர்களை வேற்றுகிரக வாசிகள் (ஏலியன்) என்றும் கூறுகின்றனர். இவர்கள் தான் உலகிற்கு பல்வேறு இடங்களுக்கு மற்ற மொழிகளையும், அறிவியல் ஆராய்ச்சிகளையும் பரப்பியுள்ளனர்.

சிக்களுக்கு தீர்வு:

சிக்களுக்கு தீர்வு:

பிளேடியன்கள் தான் மொழி வரலாறு, விஞ்ஞானம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகின்றது. ஏலியன்கள் பல்வேறு நாட்டு மக்களுடன் தொடர்பில் இருப்பதாக அமெரிக்காவில் இது குறித்து ஆராய்ச்சி செய்யும் குழுவினர் கூறி வருகின்றனர். உலகத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வுகளும் பிளேடியன்கள் தான் கூறிவருவதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்கா குழு:

அமெரிக்கா குழு:

அமெரிக்காவில் பிளேடியன்களுடன் தொடர்பில் உள்ள குழுவினர் உலகத்தில் நிகழும் பருவகால மாற்றம், பல்வேறு சிக்கல்களுக்கும் தீர்வும் கண்டுள்ளனர். இவர்கள் புத்தகங்கள் படிப்புது இல்லை. பிரச்னைகளுக்கு பிளேடியன்கள் தொடர்பு கொண்டு தீர்வும் கண்டு வருவதாக கூறப்படுகின்றது.

தமிழிலே உலகின் மூத்த மொழி:

நீண்ட காலமாக ஏலியன்களுன் தொடர்பில் உள்ள அமெரிக்காவை சேர்ந்த பேராசியர் அலெக்ஸ் காலியர் 1995ம் ஆண்டு தனது குழுவினர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, பிளேடியன்களால் தான் மற்ற மொழிகள் உலகிற்கு பரப்பட்டது. அவர்களே உலகின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றனர். உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ் தான் என்று கூறினார். தமிழ் தான் பேச்சப்பட்டது.

ஏலியன்களுடன் தொடர்பு:

ஏலியன்களுடன் தொடர்பு:

உலகின் மூத்த மொழியே தமிழ் தான் என தனது குழுவினர்களுக்கு கூறினார். தமிழர்கள் ஏலியன் (பிளேடியன்) தொடர்பிலும் இருந்துள்ளனர். என்றும் அலெக்ஸ் காலியர் தெரிவித்துள்ளார்.

ஏலியன்கள் பேசுவதும் தமிழ்:

ஏலியன்கள் பேசுவதும் தமிழ்:

அந்த ஏலியன்கள் முழுவதும் பேசும் மொழியாக தமிழ் தான் இருக்கின்றது. கார்த்திகை நட்சத்திரத்தில் வாழும் ஏலியன்கள் அவர்கள் தமிழ் மொழில் பேசுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
pleiades, aliens, speak, tamil, mystery, Smartphone, Technology, News, India, கார்த்திகை நட்சத்திரம், ஏலியன்கள், தமிழ் பேசுவது, பிளேடீயஸ், பிளேடியன்ஸ், ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள், இந்தியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X