பாகிஸ்தான்-சீனாவுக்கு நெத்தியடி.! அட்டகாசத்து ஆப்பு வைத்த இந்தியா.!
இந்நிலையில், அந்தமான் நிக்கோபார் தீவில் புதிய கடற்படை விமான தளம் அமைத்துள்ளது. மேலும், இஸ்ரேலிலிடம் இருந்து ஹராப் ரக போர் விமானங்களை வாங்குகின்றது இந்தியா.
பாகிஸ்தான்-சீனாவுக்கு நெத்தியடியாக இந்தியா ஆப்பு வைத்துள்ளது. இந்திய-சீனா, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறல் நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்திய ஆழ்கடல் பகுதியல் சீனாவும், பாகிஸ்தானும் நுழைந்து வருகின்றன.

இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக இந்திய பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றது. மேலும், உள்-வெளிநாட்டு தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புகளையும் இந்தியா ராணுவத்தில் புகுத்தி வருகின்றது.
இந்நிலையில், அந்தமான் நிக்கோபார் தீவில் புதிய கடற்படை விமான தளம் அமைத்துள்ளது. மேலும், இஸ்ரேலிலிடம் இருந்து ஹராப் ரக போர் விமானங்களை வாங்குகின்றது இந்தியா.

சீனாவுக்கு அத்துமீறலுக்கு போட்டி:
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் சீனா தனது வணிக, ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்கி வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கூடுதல் போர்க்கப்பல்களை நிறுத்தவும், போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை நிறுத்தி வைக்கவும், படையணிகளை நிறுத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு குழு ஒப்புதல்:
பாதுகாப்புக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளைப் பத்தாண்டுகளில் செயல்படுத்த அந்தமான் நிக்கோபார் பாதுகாப்புப் பிரிவு திட்டமிட்டுள்ளது. இதற்குத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான பாதுகாப்புத் திட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவிடம் அணு ஆயுதங்கள்:
இந்தியாவை ஒட்டி இருக்கும் பாகிஸ்தானிடம் 20 அதிநவீன போர் விமானங்களும், எப்-16எஸ், ஜே ஜே 17 போர் விமானங்களும் அதிகளவில் இருக்கின்றன. மேலும், சீனாவிடம் 1,700 போர் விமானங்களும் இருக்கின்றன. 4ம் தலைமுறைக்கான 800 போர் விமானங்களும் இருக்கின்றன.

இந்திய விமானப்படை:
எதிரி நாட்டு இலக்குகளையும், ராணுவ வாகனங்களையும் அழிக்கும் ட்ரோன் விமானங்களை இஸ்ரேலிடம் இருந்து வாங்குவதற்கு இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

ஹாரப் டிரோன்கள்:
அண்டை நாட்டுடன் நடக்கும் போரின் போது மனித இழப்புகளைத் தவிர்ப்பதற்காக இஸ்ரேல் நாட்டு தயாரிப்பான ஹாரப் ((HAROP)) ரக ட்ரோன்களை 15 என்ற எண்ணிக்கையில் வாங்க விமானப்படையின் உயர்மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஹாரப் டிரோன்கள்:
ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாதத் தலைவர்களைக் கொல்வதற்கு ஹாரப் வகை ட்ரோன்களை அமெரிக்கா பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய வலுப்படுத்துகின்றது:
இந்தியா தனது முப்படைகளையும் வலுப்படுத்திக் கொண்டிருகின்றது. இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிடம் இருந்து தொழில் நுட்ப ஆயுதங்களையும் தனது படைகளுக்கு பயன்படுத்த துவங்கியுள்ளது. இதற்காக அணு ஆயுதங்களும் வாங்கப்படுகின்றது.

அத்துமீறும் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் ஆப்பு:
இந்தியா கடல், தரை வழி ஆகிய எல்லைகளில் அத்துமீறும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இது இந்தியா ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால் இது பாகிஸ்தான்-சீனாவுக்கும் நெத்தியடியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications