உலகின் உயரிய கட்டிடத்தில் செல்ஃபி புள்ள, நீங்க பாத்தீங்களா..?
செல்ஃபி எடுப்பதின் உச்சத்தில் செயல்பட்டுள்ளார் இந்த இங்கிலாந்து புகைப்படக்காரர், ஜெரால்ட் டோனோவன் என்ற இந்த புகைப்படக்காரர் துபாயில் இருக்கும் உலகின் உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிபாவின் மீது ஏறி செல்ஃபி எடுத்துள்ளார்.

செல்ஃபி எடுக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் செல்ஃபிக்களை எடுத்து வரும் நிலையில் செல்ஃபிக்களில் ஏதாவது வித்தியாசமாக செய்ய விரும்பியதன் விளைவு ஜெரால்ட் டோனவனுக்கு உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா மீது செல்ஃபி எடுக்கும் ஆசை ஏற்பட்டது.

அதன்படி அவர் 2,723 அடி உயரமுள்ள புர்ஜ் கலிபாவுக்கு சென்று அதன் உச்சியில் ஏறி செல்ஃபி எடுத்தார். இந்த செல்ஃபியை எடுக்க விசேஷ பானாரோமிக் கேமராவை பயன்படுத்தியுள்ளார் ஜெரால்ட், இந்த கேமராவை ஐபோன் ஆப் மூலம் இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த போட்டோ எடுக்க சிங்கிள் - ஷாட் 360 டிகிரி பானாரோமிக் கேமராவை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications