பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் : லாப நஷ்டங்களும் , கவனிக்க வேண்டியவைகளும்.!
பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 10 அம்சங்கள்.!
இணையவழி வர்த்தக நிறுவனமான பேடிஎம் சேவையை தனியார் நிறுவனங்கள் முதல் அனைத்து கடைகள் வரை அனைவரும் இப்போது பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இது பயன்படுத்துவதற்க்கு மிக எளிதாக உள்ளதாக பல மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பேடிஎம் தனது சேவையான பேடிஎம் பேமன்ட் வங்கி சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் எளிய இணைய வழி பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். நாட்டில் உள்ள அனைத்துமக்களும் தற்போது பேடிஎம் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

ரிசர்வ் வங்கி:
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பேடிஎம் நிறுவனம் செயல்படுகிறது. இனிமேல் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு மிக எளிமையான முறையில் பணப் பரிமாற்றம் செய்யமுடியும்.

பேடிஎம்:
உங்களின் பேடிஎம் கணக்கில் லாகின் செய்யவும். நீங்கள் வாலெட்டில் போட விரும்பும் தொகையை டைப் செய்து ஆட் மணி பட்டனை கிளிக் செய்யவும். கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது வேறு எந்த வழியில் பணத்தை போடுவது என்பதை தேர்வு செய்யவும்.

ஓடிபி:
சிவிவி மற்றும் ஓடிபி கொடுத்தவுடன் உங்களின் பேடிஎம் வாலெட்டிற்கு பணம் வந்துவிடும், வாலெட்டில் உள்ள பணத்தை வைத்து ஷாப்பிங் செய்யலாம், பில் கட்டலாம், பணப் பரிமாற்றம் செய்யலாம்.

பேடிஎம் ஆப்:
இந்த வசதி தற்போது பேடிஎம் ஆப் பயன்படுத்தி பேங்க் ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரின் பெயர், வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி கோடு ஆகியவற்றுடன் நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையையும் குறிப்பிடவும் பணம் அனுப்பும் காரணத்தையும் குறிப்பிடலாம்.

கேஷ் பேக் :
இந்த பேமன்ட் வங்கியில் கணக்கு தொடங்கும் முதல் மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு 20,000 ரூபாய்க்கு 250 ரூபாய் கேஷ் பேக் செய்யப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் பணத்திற்கு 4 சதவீதம் வட்டி வழங்குகிறது.

பயன்பாடுகள்:
பேடிஎம் பொருத்தவரை பல இடங்களில் பயன்படும், மேலும் வண்டிகள் , எரிபொருள், உணவு,பொருட்கள் முதலியவற்றிற்காக பணம் செலுத்துவதற்கு, பயனர்கள் அதை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

2020ஆம் ஆண்டு:
வரும் 2020 ஆண்டுக்குள் 50 கோடி வாடிக்கையாளர்களை ஈர்க்கவுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய வழிமுறையில் வங்கிச் சேவையாற்ற ரிசர்வ் வங்கி சிறப்பானதொரு சந்தர்ப்பத்தை பேடிஎம் நிறுவனத்திற்க்கு தந்துள்ளது.

கடன்:
பேடிஎம் வைத்திருப்பவர்கள் அனைத்து வங்கியில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யலாம். ஆனால் இவற்றில் கடன் வசதி வழங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

செயலற்ற நிலை:
ஆறு மாதங்கள் செயலற்ற நிலையில் உள்ள பேடிஎம் பணப்புழக்க கணக்குகள், பூஜ்ஜிய சமநிலையைக் கொண்டிருக்கும். அவை மாற்றப்படாது.
இந்த பயனர்கள் தங்களின் கணக்குகளை தொடரமுடியாது.

ஐஎம்பிஎஸ் மற்றும் ஆர்டிஜிஎஸ்:
பூஜ்ஜிய சமநிலையைக் கொண்டிருக்கும் கணக்குகள் பொருத்தமாட்டில், ஐஎம்பிஎஸ், என்இஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் போன்ற அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகள் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் பொருந்தாது என்று நிறுவனம் கூறியது.


Click it and Unblock the Notifications