பேடிஎம் நிறுவன வருவாய் அறிக்கை: அடேங்கப்பா நல்ல முன்னேற்றம்.!
இந்தியா முழுவதும் பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்ற பல செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேபோல் தற்போது நாடு முழுவதும் அதிக மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளையே அதிகம் உபயோகித்து வருகின்றனர் என்றுதான்
கூறவேண்டும்.

அதாவது ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன்செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விமான டிக்கெட், ரெயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றுக்கு கட்டணம் செலுத்தும் வசதி, செல்போன்,டி.டி.ஹெச். போன்ற சேவைகளை ரீசார்ஜ் செய்யும் வசதிகளை வழங்கி வருகிறது இதுபோன்ற செயலிகள். குறிப்பாக பேடிஎம், போன் பே,கூகுள் பே போன்ற செயலிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் பேடிஎம் நிறுவனம் 2021-2022 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி பேடிஎம் நிறுவனத்துக்கு இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 64 சதவீதம் வருவாய் உயர்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இதன் மூலம் ரூ.1,090 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

குறிப்பாக யு.பி.ஐ அல்லாத பண பரிவர்த்தனை சேவை இந்த காலாண்டில் 54 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் நிதி சேவை மற்றம் இதர வருவாய் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பரிவர்த்தனை மற்றும் நிதியில் சேவைப்பிரிவு மூலம் வருமானம் 69 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து ரூ.842.60 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வர்த்தகம் உள்ளிட்ட வேறு சேவைப்பிரிவு வருமானம் 47 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து ரூ.243 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேடிஎம் நிறுவனம் பை நவ் பேல லேட்டர் என்ற திட்டத்தின் மூலம் நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இரண்டாவது காலாண்டில் சுமார் 28 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதேபோல் பேடிஎம் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளையும் செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

இதேபோன்று போன் பே நிறுவனமும் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மொபைல் ரீசார்ஜ்களின் தொந்தரவைக் குறைத்துள்ளன. முன்புமொபைல் பயனர்கள் தங்களுக்கு ரீசார்ஜ் செய்ய கடைக்கு சென்று பிடித்த டாப்-அப் திட்டங்களை வாங்க வேண்டிய நிலைமை இருந்தது, ஆனால் இப்போது பயனர்களுக்கு எளிதான ரீசார்ஜ் வசதியை வழங்குகின்றன இந்த அசத்தலான செயலிகள். மேலும் இதுபோன்ற செயலிகள் பயனருக்கு பணம் அனுப்பவும் பெறவும், மொபைல், டி.டி.எச் அல்லது பிராட்பேண்ட் இணைப்புகளை எந்த வெளிப்புற தொந்தரவும் இல்லாமல் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications