Home
News

53 உயர்நிதிமன்ற நீதிபதிக்கு iPhone 13 Pro வாங்க புது டெண்டர்.. ஏன் ஐபோன் 13 செலக்ட் செஞ்சாங்க தெரியுமா?

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு புதிய ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ வாங்குவதற்கான டெண்டரை பாட்னா உயர்நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ ஸ்மார்ட்போனின் 256ஜிபி மாறுபாட்டை எதிர்பார்ப்பதாக கோரி, விருப்பம் உள்ள மற்றும் ஆர்வமுள்ள சப்ளையர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்களை விண்ணப்பிக்கும் படி நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

நீதிபதிகளுக்கு ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ

நீதிபதிகளுக்கு ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ

ஏன் குறிப்பாக iPhone 13 Pro மாடலை நீதிமன்றம் செலக்ட் செய்தது? எதற்காக இந்த புதிய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது என்று தெளிவாகப் பார்க்கலாம். பட்னாவின் உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கு ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ சாதனத்தை வாங்குவதற்கான டெண்டரை நீதிமன்றம் கோரியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் சேவைக் கட்டணங்கள் உட்பட அனைத்து தகவலையும் உள்ளிட்டு

ஆர்வமுள்ள சப்ளையர்கள் அணுகலாம்

ஆர்வமுள்ள சப்ளையர்கள் அணுகலாம்

விலையைச் சமர்ப்பிக்க ஆர்வமுள்ள சப்ளையர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்களுக்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. மேற்கோள்களைச் சமர்ப்பிக்கும் போது விற்பனையாளர்கள் தங்களின் ஜிஎஸ்டி எண், பான் விபரம், ஆதார் விபரம், மின்னஞ்சல் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அதன் அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளது.

நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு என்ன சொல்கிறது?

நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு என்ன சொல்கிறது?

குறிப்பாக ஐபோன் 13 ப்ரோ மாடலுக்கான விபரங்களை மட்டும் கோட் செய்ய வலியுறுத்தியுள்ளது. நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில், "இந்த நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதிகளுக்கு ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ (256 ஜிபி) வழங்குவதற்காக புகழ்பெற்ற நிறுவனங்கள் / அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் / சப்ளையர்கள் / சேவை வழங்குநர்களிடமிருந்து சீல் செய்யப்பட்ட டெண்டர்கள் வரவேற்கப்படுகிறது" என்று டெண்டர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயம் மிகவும் முக்கியமானதாம்

இந்த விஷயம் மிகவும் முக்கியமானதாம்

"குறிப்பாக புதிய டிவைஸை வழங்கும் நிறுவனத்தின் தலைமையகம் / அலுவலகம் / கடை பாட்னாவில் இருக்க வேண்டும்" என்று டெண்டர் அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐபோன் 13 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கான அறிவிப்பை பாட்னா உயர் நீதிமன்றத்தின் சார்பில் சிறப்புப் பணியில் உள்ள அதிகாரி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி இந்த ஐபோன்களுக்கான கட்டணம் வழங்கப்படும்?

எப்படி இந்த ஐபோன்களுக்கான கட்டணம் வழங்கப்படும்?

இந்த அறிவிப்பின்படி, அனைத்து மேற்கோள்களையும் ஏற்றுக்கொள்ளும் டீலரை நீதிமன்றம் தேர்வு செய்யும். அதேபோல், நீதிமன்றங்கள் முன்கூட்டியே பணம் செலுத்தாது. மேலும், ஒரு வாரத்திற்குள் டீலர்கள் ஏலத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதலாக, ஒரு நகல் மசோதாவைச் சமர்ப்பித்த பிறகு, கடிதத்தின் படி வங்கி (CFMS முறை) மூலம் நிதி மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

53 நீதிபதிகளுக்கு ஐபோன் 13 ப்ரோ வாங்க முடிவு

53 நீதிபதிகளுக்கு ஐபோன் 13 ப்ரோ வாங்க முடிவு

தற்போது பாட்னா உயர்நீதிமன்றத்தில் 53 நீதிபதிகள் உள்ளனர். இருப்பினும், ஜூன் 1, 2022 நிலவரப்படி, பணிபுரியும் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உள்ளது. மேலும் 9 நீதிபதிகள் பெஞ்சில் நியமனம் செய்யப்படுவதை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்ததன் மூலம் பலம் 36 ஆக அதிகரிக்க உள்ளது. இதனால், இறுதியில் பாட்னா நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 53 ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

ஏன் குறிப்பாக ஐபோன் 13 ப்ரோ மாடல் மட்டும் தேர்வு செய்யப்பட்டது?

ஏன் குறிப்பாக ஐபோன் 13 ப்ரோ மாடல் மட்டும் தேர்வு செய்யப்பட்டது?

ஐபோன் 13 ப்ரோ சாதனத்தின் பராமரிப்புக்காகத் தேவைக்கேற்ப நேரத்தில் ஸ்மார்ட்போன்களின் சப்ளையர் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நிறுவனங்கள் அல்லது சப்ளையர்கள் குறைபாடுள்ள பொருட்களை உடனடியாக உத்தரவாத காலத்திற்குள் இலவசமாக மாற்ற வேண்டும் என்றும் அது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. சரி, இப்போது ஏன் குறிப்பாக ஐபோன் 13 ப்ரோ மாடல் மட்டும் தேர்வு செய்யப்பட்டது என்று பார்க்கலாம்.

எந்தவிதமான தாக்குதலையும் தாங்க கூடியது ஐபோன் தானா?

எந்தவிதமான தாக்குதலையும் தாங்க கூடியது ஐபோன் தானா?

டிஜிட்டல் தாக்குதல், மால்வேர் அட்டாக் மற்றும் பாதுகாப்பு பிரச்னை என்று அனைத்து வகையான பாதுகாப்பு சிக்கல்களில் இருந்து ஆப்பிள் ஐபோன்கள் தனித்து உறுதியாக நிற்கிறது. பாதுகாப்பு என்ற அடிப்படையில் யோசிக்கும் போது ஆப்பிளின் ஐபோன் தான் சிறந்தது. ஹேக்கர்களால் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை சில நிமிடங்களில் அதிகம் மெனக்கிடாமல் எளிதாக ஹேக் செய்ய முடியும்.

ஹேக்கர்களே ஹேக் செய்ய திணற வேண்டுமா?

ஹேக்கர்களே ஹேக் செய்ய திணற வேண்டுமா?

ஆனால், ஐபோன் என்று வரும் பச்சத்தில் ஹேக்கர்கள் இரட்டிப்பாக வேலை செய்ய வேண்டியதுள்ளது. ஆம், ஐபோனை ஹேக் செய்ய கூடுதல் வேலைகளை ஒரு ஹேக்கர் மேற்கொள்ள வேண்டும். ஒரு iOS சாதனத்தை ஹேக் செய்ய வேண்டுமெனில் அந்த ஹேக்கர் ஒரு எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் அதிக நேரம், செலவு தேவைப்படும். iOS சாதனத்தின் கட்டுப்பாடு முழுமையாக ஆப்பிளிடம் இருப்பதால் ஹேக்கர்களுக்கு இது சிக்கலை உருவாக்குகிறது. இதனாலேயே ஐபோன் சாதனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Patna High Court Issues Tender To Buy Apple iPhone 13 Pro For All Judges Whats The Reason Behind : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X