இனி தொலைதொடர்பு துறையில் பதஞ்சலி: சுதேசி சம்ரித்தி சிம்.!
சுதேசி சம்ரித்தி கார்டு வாங்கி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2.5 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு மற்றும் 5லட்சம் மதிப்புடைய மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
இந்தியாவில் தொலைதொடர்பு துறையில இபபோது கடும் போட்டி நிலவி வருகிறது, இந்நிலையில் ஆயுர்வேத பொருட்களை தயாரித்து வரும் பதஞ்சலி நிறுவனம் தொலைதொடர்பு நிலையில் தடம் பதித்துள்ளது, மேலும் அனைத்து இடங்களிலும் பதஞ்சலி அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பதஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவத்துடன் இணைந்து சுதேசி சம்ரித்தி என்ற சிம் கார்டை இன்று அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் இலவச எஸ்எம்எஸ் போன்றவை இந்த சிம் கார்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5லட்சம்:
பதஞ்சலி மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் அறிவத்துள்ள இந்த சிம் கார்டுகள் நாடு முழுவதும் 5லட்சம் கடைகள் மற்றும் நேரடி
பதஞ்சலி கடைகளிலும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிம் கார்டு பாபா ராம்தேவ் வெளியிட்டார் என்பது
குறிப்பிடத்தக்கது.

ரூ.144/-திட்டம்:
சுதேசி சம்ரித்தி சிம் கார்டு வாங்கி ரூ.144/- ரீசார்ஜ் செய்தால் 2ஜிபி டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் அதற்காக ஒப்பந்த பணிகள் நடைபெற்று வருகிறது என பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீடு:
சுதேசி சம்ரித்தி கார்டு வாங்கி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2.5 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு மற்றும் 5லட்சம்
மதிப்புடைய மருத்துவ காப்பீடு கிடைக்கும் என பதஞ்சலி மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிறுவன ஊழியர்கள்:
இந்த சிம் கார்டுகள் முதல் கட்டமாக பதஞ்சலி நிறுவன ஊழியர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது,விரைவில் விற்பனைக்கு
வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சுதேசி சம்ரித்தி சிம் கார்டு வெளிவரும் போது வாடிக்கையாளர்கள் பதஞ்சலி பொருட்களை
வாங்கினார் 10சதவீதம் சலுகை கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ:
பதஞ்சலி மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ள சுதேசி சம்ரித்தி கார்டு ரிலையன்ஸ் ஜியோவிற்கு மிகப் பெரிய
போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications