Just In
- just now புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 5 min ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
- 20 min ago ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- 1 hr ago ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
Don't Miss
- Movies வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!
- News "கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்".. CSK போட்டியின்போது 12 பேரை கொக்கி போட்டு தூக்கிய போலீசார்!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தனது விமானத்தையே சுட்டு வீழ்த்திய பாக். இந்தியா கிண்டல்.!
பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. மேலும், தாக்குதல் நடத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா விமானம் என்று நினைத்து போர் பீதியால், தனது சொந்த நாட்டு விமானத்தையே ச
புல்வாமா தாக்குதலால் 40 வீரர்கள் பலியாகியுள்ள நிலையில், இந்தியா கடும் கோபத்தில் இருக்கின்றது. பாகிஸ்தான் தனது ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றது.
மேலும், தீவிரவாத செயல்களையும் ஊக்கப்படுத்தி வருகின்றது. இந்தியா துணை ராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலுக்கு பலி தீர்க்கும் வகையில் இருக்கின்றது.
பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. மேலும், தாக்குதல் நடத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா விமானம் என்று நினைத்து போர் பீதியால், தனது சொந்த நாட்டு விமானத்தையே சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்.
44 வீரர்கள் பலி:
சிஆர்பிஎப் (துணை ராணுவம்) வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் 44 பேர் இறந்தனர். மேலும், 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
அமைப்பு பொறுப்பு ஏற்பு:
இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடமாக இருக்கின்றது என்று இந்தியா குற்றம்சாட்டி வருகின்றது. மேலும் தீவிரவாதிகளை முகாம்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது.
இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல்:
இந்தியாவின் எல்லையை தாண்டி பாகிஸ்தான் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தாலம் என்று பாகிஸ்தான் எண்ணுகின்றது. எல்லையில் இருநாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
போர் பதற்றம்:
எல்லையில் இந்தியா ரகசியமாகவும் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. மேலும், தனது வித்தியாசமான முறையில் இந்தியா தாக்க கூடும் என்றும் பாகிஸ்தான் அஞ்சுகின்றது.
போர் சந்திக்க தயார்:
பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் காணும் , பாக்கிஸ்தான் ராணுவ தளபதியும் போர் வந்தால் சந்திக்க தயார் என்று கூறியுள்ள நிலையில் இதற்கு முன்னரே இந்திய ராணுவ தளபதி எப்போது புல்வாமாவில் தாக்குதல் நடத்தப்பட்டது அன்று முதல் பாக்கிஸ்தான் ராணுவத்திற்கும் , அரசியல் வாதிகளுக்கும் உறக்கமே வராது என்று கூறியிருந்தார். அதே போல தான் தூக்கம் இல்லமல் பயத்தில் உள்ளது பாக்கிஸ்தான்.
விமானத்தை சுட்டு வீழ்த்திய பாக்:
அதை உறுதிப்படுத்தும் விதமாக வியாழக்கிழமை மாலை LOC எனப்படும் லைன் ஆப் கண்ட்ரோல் மீது பறந்து இந்திய எல்லையை உளவுபார்த்து கொண்டிருந்த பாக்கிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான ஒரு விமானத்தை பாக்கிஸ்தான் ராணுவமே சுட்டு வீழ்த்தியது.
மறைக்க முயற்சி:
பாக்கிஸ்தான் விமானத்திற்கு , இந்திய விமானத்திற்கு வித்தியாசம் தெரியாமல் , இந்திய விமானம் என்று நினைத்து பயத்தில் அதை சுட்டு வீழ்த்தியுள்ளது பாக்கிஸ்தான் ராணுவம். இந்த செய்தியை மறைக்க பாக்கிஸ்தான் முயன்றது.
அவமானம் ஏற்படுத்தியது:
ஆனாலும் இப்போது இந்த செய்தி ஊடகங்களில் கசிந்து விட்டது , இதனால் பாகிஸ்தானுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது.
சர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு படை :
மத்திய அரசு சர்ஜிக்கல் தாக்குதலுக்காக சிறப்பு படை ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் எல்லைக்கோட்டையும் தாண்டி அந்த நாட்டு ராணுவத்திற்கும் தெரியாமல் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. இதில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் தீவிரவாத முகாம்களும் கூண்டோடு அழிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது கடும் எரிச்சலுக்கு உள்ளானது.
ரதமர் மோடி ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதத்தை ஒழிக்க உதவும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், எல்லை மீறி தாக்குதல் நடத்த துணை போகும் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளுக்காக சிறப்பு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடந்த சிறப்பு படையை மத்திய அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அலறுகின்றது.
பதான் கோட் தாக்குதல்:
2016 ஜனவரி 2-ம் தேதி பதான்கோட் விமான தளத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில், 17 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில், பாதுகாப்பு படையினர் 7 பேர் உயிரிழந்தனர். 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்:
அதைத்தொடர்ந்து, செப். 29ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவத்தின் ஸ்பெஷல் கமாண்டோ படை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை கோட்டுப் பகுதிக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது.
7 தீவிரவாதிகள் முகாம் அழிப்பு:
சுமார் 2 கிலோமீட்டர்கள் வரை எல்லைக் கோட்டைத் தாண்டி இந்த படை ஊடுருவிச் சென்று, 7 தீவிரவாத முகாமை அழித்துள்ளனர். இதில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுவே சர்ஜிக்கல் ஸ்டிரைக்:
அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு வேட்டை முடிந்துள்ளது. இது போன்ற அட்டாக்கை Surgical Strike (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) என்று கூறுகிறார்கள்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்றால் என்ன?
ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ பிரிவு நடத்தும் ஒரு சர்பிரைஸ் தாக்குதலுக்கு பெயர் தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக். ஒரு பிசுரு கூட இல்லாமல் துல்லியமாக இலக்கு அழிக்கப்படும்.
எப்போது நடக்கும்:
தீவிரவாதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஹை அலர்ட் ஏற்படும் போது தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்படும்.
உறுதி கிடைக்க வேண்டும்:
தீவிரவாதிகளின் நடமாட்டம் பற்றி உளவு பிரிவிலிருந்து மிகவும் உறுதிபடுத்தப்பட்ட தகவல் கிடைத்தால் மட்டுமே இந்த தாக்குதல் முன் எடுக்கப்படும்.
நவீன ஆயுதங்கள்:
அதி நவீன ஆயுதங்களை கையாளுவதில் இவர்கள் கில்லி.
தொழில் நுட்பத்துடன்:
அடர்ந்து காட்டுப்பகுதியின் இருட்டுக்குள் ஊடுருவ உதவும் நைட் விஷன் கிளாஸ், புல்லெட் ப்ரூஃப் ஜாக்கெட்கள் என இந்த படை ஹை டெக்காக இருக்கும்.
சாதுர்யமாக கையாளுவார்கள்:
எதிர்பாராத ஆபத்துக்களை சாதுர்யமாக கையாளும் திறன் படைத்திருக்கும்.
பிளான் என்ன ?
ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன் தான் தாக்குதல் நடத்துவது பற்றி பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி, பாதுகாப்பு ஆலோசகர் கொண்ட உயர்மட்டக் குழு முடிவு எடுக்கும்.
தாக்குதல் தகவல்கள்:
உடனடியாக கமாண்டோ குழு அழைக்கப்படும். தாக்க வேண்டிய இலக்கு எங்கிருக்கிறது, அதன் வரைபடம், எத்தனை பேர், எவ்வளவு நேரம் போன்ற தகவல்கள அவர்களுக்கு கொடுக்கப்படும்.
தாக்குதல் தகவல்கள்:
உடனடியாக கமாண்டோ குழு அழைக்கப்படும். தாக்க வேண்டிய இலக்கு எங்கிருக்கிறது, அதன் வரைபடம், எத்தனை பேர், எவ்வளவு நேரம் போன்ற தகவல்கள அவர்களுக்கு கொடுக்கப்படும்.
அதிகாலை தாக்குதல்:
அதை வைத்து அதிவேகமாக தாக்குதலை செயல்படுத்துவது பற்றி திட்டமிடப்படும். அதிகாலையில் தான் இந்த ஸ்டிரைக் நடக்கும். அது தானே சர்பிரைஸ்!.
உன்னிப்பான தாக்குதல்:
உயர்மட்டக் குழு இதனை உன்னிப்பாக கவனிக்கும். எல்லைத் தாண்டிய தாக்குதல் என்பதால், போர் சூழல் எழும் ஆபத்து உள்ளது. இதனால் இந்த உயர்மட்டக் குழு மிக கவனமாக இருக்கும்.
ஆப்ரேஷன் தொடங்குவது எப்படி?
போர் விமானம் மூலம் பேராசூட்டிலோ அல்லது ஹெலிகாப்டர் மூலமோ எல்லையில் வீரர்கள் இறக்கி விடப்படுவார்கள்.
முன்னேறுவார்கள்:
எதிர்நாட்டு எல்லைக்குள், ஏற்கெனவே போடப்பட்ட பிளான் படி இலக்கை நோக்கி அணிகளாக பிரிந்து முன்னேறுவார்கள்.
2 மணி நேரத்தில் கடப்பார்கள்:
பாதையில்லாத கடுமையான காட்டுப்பகுதிகளில் 7 கிலோமீட்டர்களை இரண்டு மணி நேரத்தில் கடக்கும் அளவுக்கு இவர்களின் வேகம் இருக்கும்.
திட்டமிட்டபடி தாக்குதல்:
தீவிரவாதிகளின் இருப்பிடத்தை அடைந்தவுடன், தான் ஸ்கெட்ச் படி அட்டாக் நடக்கும். ஒரு குழு ஆயுத தாக்குதல் நடத்தி முன்னேறும்.
சுற்றி வளைக்கும்:
மற்றொரு குழு முகாமைச் சுற்றி வளைத்து தீவிரவாதிகள் தப்பிக்காத படி அணைக்கட்டும்.
எல்லைக்கு திரும்புவார்கள்:
சட்டு சட்டு என சத்தமே இல்லாமல் காரியத்தை முடித்துவிட்டு, முன்னர் பிளான் செய்யப்பட்ட நேரத்துக்குள் மீண்டும் எல்லை திரும்புவர்.
எதிர் நாட்டுக்கும் செல்லப்படும்:
காரியம் கச்சிதமாக முடிந்த பின்னர், ‘உங்க எல்லைக்குள்ள புகுந்து சம்பவம் செஞ்சிட்டோம்', என்று எதிரிநாட்டுக்கு சொல்வது தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் ஸ்டைல். இது தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.
தற்காப்பு:
இந்த தாக்குதல் போருக்கான தொடக்கப் புள்ளி என்று அர்த்தமில்லை. இது நாட்டு பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்படும் தற்காப்பு.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் உணர்ந்தது:
இந்நிலையில், எல்லை மீறும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தேவை என மத்திய அரசுக்கு தேவை எழுந்துள்ளது.
முப்படைகளில் தேர்வு:
இந்நிலையில் முப்படைகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பான வீரர்களைக் கொண்ட சர்ஜிகல் படையின் அவசியத்தை மத்திய அரசு உணர்ந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சீல்:
அமெரிக்காவின் சீல் டீம் போல இந்தியாவின் சர்ஜிக்கல் டீம் துல்லியமாக தாக்குதல் நடத்த சிறப்பு படையை உருவாக்க முனைப்பில் ஈடுபட்டுள்ளது.
முப்படைகள்:
ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் இருப்பார்கள்.
திரும்பும் படை:
எதிரிகளின் உள்ளடங்கிய பிரதேசங்களுக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்தி விட்டு திரும்பும் வகையில் இந்தப் படை உருவாக்கப்படும்.
பிளான்:
இந்தப் படை திட்டமிடுதல் மற்றும் தாக்குதல் என இரு பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்.
124 வீரர்கள் இருப்பார்கள்:
திட்டமிடுதல் பிரிவில் 96 வீரர்களூம் தாக்குதல் பிரிவில் 124 வீரர்களும் இருப்பார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470