இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.!
தற்போது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கட்டாயம் பதிலடி கொடுக்கும். மேலும் இதற்கு இந்தியாவும் திட்டம் தீட்டியுள்ள நிலையில், பாகிஸ்தான் பீதியடைந்துள்ளது.
புல்வாமா தாக்குதலால் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றது. மேலும், இந்தியாவின் மீது தாக்குதலுக்கும் உதவி வருகின்றது.

தற்போது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கட்டாயம் பதிலடி கொடுக்கும். மேலும் இதற்கு இந்தியாவும் திட்டம் தீட்டியுள்ள நிலையில், பாகிஸ்தான் பீதியடைந்துள்ளது.
மேலும் தனது நாட்டில் உள்ள மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்கும்படி பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.

44 வீரர்கள் பலி:
சிஆர்பிஎப் வீரர்கள் 2500 பேர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக காஷ்மீர் மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். புல்வாமா பகுதியில் செல்லும் போது, கான்வாய் மீது மோதி வெடி குண்டு நிரம்பிய காரை மோத விட்டு, தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்தியது. சம்பவ இடத்திலேயே 44 ராணுவ வீரர்கள் பலியாகினர். 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் அமைப்பு:
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா மீது பாகிஸ்தான் தனது வன்புணர்ச்சியை காட்டி வருகின்றது. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி வழங்கி, வழியனுப்பி வருவதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கு ஆதரவு:
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு தனது ஆதவையும் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொண்டன.
மேலும், தீவிரவாதிளை முற்றிலுமாக அழிக்க இந்தியாவுக்கு அனைத்து வகையிலும் உதவுவதாகவும் தெரிவித்துக் கொண்டன. மேலும் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தெரிவித்துக் கொண்டன.

100 மணி நேரத்தில் தீவிரவாதிகளை அழித்தது:
புல்வாமா தாக்குதாலுக்கு காரணமான தீவிரவாதிகள் காஸ்மீர் பகுதியில் பதுங்கியிருந்தன. இந்தியா தீவரவாதிகளை அடியோ அழிக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதால், 100 மணி நேரத்தில் 3 தீவரவாதிளை சுட்டுக் கொன்றது இந்தியா.

இஸ்ரேல் முழு ஆதரவு:
இந்தியா தனது ஆயுதம் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கி பாகிஸ்தான்-தீவிரவாதிகள் மீதும் தாக்குதல் நடத்தலாம் என்றும் கூறியுள்ளது.
இந்தியா தனது நாட்டின் பாதுகாப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

எல்லையில் பதற்றம்:
தீவிரவாதிகளின் முகாம்களை கூண்டோடு வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது. மேலும், எல்லையில் போர் பதற்றம் நிலவுவதால், தனது படைகளையும் குவித்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்துள்ளது. இதனால் இருநாட்டிற்கும் போர் ஏற்படலாம் என்று தோன்றுகின்றது.

பாகிஸ்தான் உத்தரவு:
இந்தியா போர்த் தொடுக்கலாம் என்ற அச்சம் காரணமாக மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது.

25 சதவீதம் கேட்டுள்ளது:
பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் ஜிலானி மருத்துவமனைக்கு எழுதியுள்ள கடிதத்தில் போர்ச்சூழல் ஏற்பட்டால் மருத்துவ உதவிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் 25 சதவீத இடங்களை ராணுவத்தினருக்காக ஒதுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுத்துள்ளது:
இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் அதிரடித் தாக்குதல் நடத்தலாம் என ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் போர் மூளும் அபாயம்.!
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் அணு ஆயுதங்கள் தொடர்பான பல்வேறு சண்டைகள் இன்று வரை இருந்து வருகின்றது.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷ்யா அடங்க மறுப்பதும், ரஷ்யாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா அடங்கமறுப்பதும் இயல்பான ஒன்றுதான். தற்போது அமெரிக்காவும் எதிராக தனது அணு ஆயுதங்களை நிலை நிறுத்த ரஷ்யா தயார் நிலையில் இருக்கின்றது.

அமெரிக்கா:
உலகில் சர்வதிகாரம் படைந்த நாடாக அமெரிக்கா விளங்கி வருகின்றது. இந்த நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு மற்ற நாடுகள் கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். இல்லை என்றால், அந்த நாட்டின் மீது பொருளாதார தடையை விதிக்கும் அமெரிக்கா மேலும், தனது நட்புற நாடுகளையும் தனது பக்கம் சேர்த்து, உதவிகளை மற்ற நாடுகளிடம் இருந்து பெறா முடியாமல் தடுக்கும்.

அணு ஆயுத விற்பனை:
மற்ற நாடுகள் தங்களிடம் தான் அணு ஆயும் வாங்க வேண்டும் என்ற நிபந்தனைகளோடே அமெரிக்கா செயல்படும். அணு ஆயுதங்களையும் விற்பனை செய்து வருகின்றது.

ரஷ்யா செயல்பாடு :
அமெரிக்கா தடை விதிக்கும் நாட்டுடன் ரஷ்யா உறவு கொண்டு அந்நாட்டிற்கு தனது அணு ஆயுதங்களையும் விற்பனை செய்யும். பல்வேறு வழிகளிலும் அமெரிக்காவுக்கு எதிராகவே செயல்படும். அமெரிக்கா அணு ஆயுதங்களையும் மற்ற நாடுகளுக்கு விற்க வேண்டாம் என்று எச்சரித்தாலும், ரஷ்யா விற்பனை செய்யும்.

அணு ஆயுத சோதனை:
ரஷ்யா அமெரிக்காவுக்கு அடங்க மறுத்து அணு ஆயுத சோதனைகளையும் நடத்தியோடு மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் அணு ஆயுதங்களையும் விற்பனை செய்து வருகின்றது. இது இரண்டு நாட்டு நட்புறவுகளை பாதிக்கும் வகையில் அமைந்தது.

அணு ஆயுதங்கள் நிலை நிறுத்தல்:
ரஷ்ய ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், அமெரிக்காவுடனான ஆயுத போட்டியை ரஷ்யா விரும்பவில்லை என்றார். இதே நேரத்தில் ரஷ்யாவை குறி வைத் து அணு ஆயுத ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் நிறுத்த அமெரிக்க முயல்வதாக அவர் கூறினார்.

அமெரிக்காவுக்கு அருகில் போர் கப்பல்:
அமெரிக்காவுக்கு அருகில், சர்வதேச கடல்பரப்பில் ரஷ்யா கப்பல்கள், நீர் மூழ்கிகள் அணு ஆயுத ஏவுகணைகளுடன் நிறுத்தப்படும் என்ற அவர், இந்த நிலையை அமெரிக்கா விரும்புகிறதா என்றும் வினா தொடுத்தார். அமெரிக்காவின் எந்த சவாலையும் எதிர்கொள்ள ரஷ்யா முழு அளவில் தயார் என புதின் தெரிவித்தார்.

தயார் நிலையில் ரஷ்யா:
அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா தயார் என அந்நாட்டு அதிபர் புதின் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications