ஜம்மு காஸ்மீரில் இந்திய துணை ராணுவ வாகனத்தின் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 50 வீரர்கள் பலியாகியுள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதத்தை ஒழிக்க உதவும் என்றும் தெரிவித்து இருந்தார்.
ஒன்றில்லை இரண்டில்லை, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஓராயிரம் 'தள்ளு-முள்ளு' தினந்தினம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்தியா மீதான பாகிஸ்தானின் பார்வையானது, நமக்கு வேண்டுமானால் 'நப்பாசை'யாக தெரியலாம், ஆனால் அது அவர்களின் 'பேராசை' என்பதை நாம் மறந்துவிட கூடாது..!
'தெளிவாக' செயல்படும் அமெரிக்கர்கள், நோட் திஸ் பாயிண்ட்..!
இந்தியாவும், பாகிஸ்தானும் 'நண்பேன்டா' என்று அரசியல் ரீதியாக, கைகுலுக்கு போட்டோக்கு 'போஸ்' கொடுத்துக் கொண்டாலும், 'எதுவும்' மாறவில்லை என்பதே நிதர்சனம். அதற்கு மற்றுமொரு சாட்சி தான் பாகிஸ்தானின் 'இந்த' சமீபத்திய 'போர்' திட்டம்..!
அதிர்ச்சி :
இந்தியா மீது 'தந்திரமான' ஒரு யுத்தத்தை நடத்த பாகிஸ்தான் திட்டமிடுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது..!
உளவுத்துறை :
இந்த 'ரசகிய' தகவலை அளித்திருக்கும் இந்திய உளவுத்துறை அதிகாரிகள், இது சார்ந்து விழிப்புடன் இருக்க எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
சைபர் ராணுவம் :
முக்கியமாக, இந்திய இணையதளங்கள், பாகிஸ்தான் சைபர் ராணுவம் மூலம் 'ஹாக்' (HACK) செய்யப்பாடலாம் என்றும் இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
திட்டம் :
அதாவது பாகிஸ்தான், இந்தியா மீது சைபர் யுத்தத்தை நிகழ்த்த திட்டமிட்டுள்ளது..!
இடையூறு :
கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தேசிய அளவிலான இணைய தளங்களில் இடையூறு ஏற்படுத்துவதே - சைபர் யுத்தமாகும்..!
முடக்கம் :
சில முக்கியமான தொடர்பு (COMMUNICATION) ஏற்படுத்தும் இணையதளங்களை முடக்குவதுதான் சைபர் யுத்தத்தின் முக்கியமான நோக்கமாகும்..!
திருடு :
அதனுடன் சேர்த்து அரசாங்கத்தின் மிக முக்கியமான மற்றும் மிகவும் ரகசியமாக பாதுகக்கப்படும் விடயங்களை திருடுவதும் சைபர் யுத்தத்தில் முக்கியமான குறிக்கோளாகும்.!
பாதுகாப்பு :
இதனால், உளவுத் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து விதமான அரசாங்க ஆவணங்களும் பன்மடங்கு பாதுகாப்பு வசதிக்குள்ளாக்கப் பட்டுள்ளதாக, இந்திய ராணுவமும், வெளியுறவுத்துறை அமைச்கங்களும் தெரிவித்துள்ளன..!
ஐஎஸ்எஸ் :
பாகிஸ்தானின் சைபர் ராணுவம், ஐஎஸ்எஸ் தீவிரவாத இயக்கமும் ஒரு கூட்டுப்படை என்பதும் குறிப்பிடத்தக்கது..!
சைபர் குற்றம் :
இதற்கு முன் பாகிஸ்தான் சைபர் ராணுவம், ஐஎஸ்எஸ் தீவிரவாத இயக்கம் ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து பல சைபர் குற்றங்களை நிகழ்த்தி உள்ளது..!
சிபிஐ :
அதில் முக்கியமாக, இந்தியாவின் சிபிஐ இணையதளத்தில் புகுந்து, பல நாட்கள் அந்த இணையதளத்தை மூடி வைக்கும்படி செய்தது குறிப்பிடத்தக்கது..!
ஹாக்கிங் :
இது போன்ற 'ஹாக்கிங்' வேலைகளை செய்வதற்காகவே, 500-க்கும் மேற்பட்ட 'ஹாக்கிங்' கில்லாடிகள் 'சைபர் யுத்த' களத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்களாம்..!
தர்ம சங்கடம் :
எப்போது வாய்ப்பு வரும் எப்போது ஹாக்கிங் செய்யலாம், இந்தியாவிற்கு தர்ம சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்று இன்டர்நெட்டில் தீயாக வேலை செய்கிறதாம் பாகிஸ்தான்..!
தீவிரம் :
அதிலும் ஐஎஸ்எஸ் தீவிரவாத இயக்கம், இந்தியா மீது சைபர் யுத்தத்தை நடத்த தீவிரமாய் இருக்கிறதாம்..!
இயக்கம் :
இந்த யுத்தத்திற்கு 'இன்டர்நெட் வார்' (INTERNET WAR) என்று பெயரிட்டுள்ளது ஐஎஸ்எஸ் தீவிரவாத இயக்கம்..!
தந்திரம் :
பாகிஸ்தான் வேறு வழியின்றி வழக்கத்திற்கு மாறான தந்திரமான வழியில் இறங்கி 'வேலை' செய்து கொண்டிருப்பதையும் இந்திய உளவுத்துறை கண்கானித்து கண்டறிந்துள்ளது..!
தெளிவு :
அணு ஆயுதம், எல்லையில் அத்துமீறல், துப்பாக்கி சூடு என்று மட்டும் கவனம் செலுத்தி கொண்டிருந்தால் போதாது, எல்லா வகையிலும் கவனம் தேவை, அதில் இந்தியா தெளிவாக செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்..!