Just In
- 59 min ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 1 hr ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 1 hr ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
- 3 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- News
ஈரோடு கிழக்கு தேர்தல்! ஓபிஎஸ் பணிமனையில் ஆள் உயர மோடி படம்.. எடப்பாடி பணிமனையில் பாஜக கொடி கூட இல்லை
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Movies
சிம்பு பிறந்தநாளில் வெளியான சிறப்பு போஸ்டர்கள்.. குவியும் வாழ்த்துக்கள்!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தடுப்பூசி போடல சிம்கார்ட்கள் பிளாக்: அரசு அதிரடி அறிவிப்பு- எங்கு தெரியுமா?
கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட மறுக்கும் மக்களின் சிம் கார்ட்கள் பிளாக் செய்யப்படும் என பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சிம் கார்ட்கள் பிளாக்
கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட மறுக்கும் மக்களின் சிம் கார்ட்கள் பிளாக் செய்யப்படும் என பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண அரசு முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன்படி கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது பிரதானமாக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செயல்முறையை விரைவுப்படுத்த முக்கிய நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

சிம் கார்ட்களின் இணைப்புகள் முடக்கப்படும்
இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தயங்கும் மக்களின் சிம் கார்ட்களின் இணைப்புகள் முடக்கப்படும் என அந்த மாகாண அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாக்., பஞ்சாப் சிறப்பு சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் ஹம்மது ராசா இந்த உத்தரவை பிறிப்பித்துள்ளார்.

மொபைல் தடுப்பூசி முகாம்கள் அமைக்க முடிவு
பாக்., பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் யாஸ்மீன் ரஷீத் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் மாகாணத்தில் ஆலயங்களுக்கு வெளியே மொபைல் தடுப்பூசி முகாம்கள் அமைக்க முடிவு செய்தது. கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே ஒரே தீர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்கார்ட்கள் பிளாக் செய்யப்படும்
ஆனால் பாகிஸ்தானில் பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பெருவாரியான மக்கள் தடுப்பூசி போட முன்வருவதில்லை. இதை கருத்தில் கொண்டு அந்த மாகாண அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. தடுப்பூசி இலக்கை முடிக்கமுடியாத காரணத்தினால் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்நாட்டு மக்கள் முதல் டோஸை செலுத்திக் கொண்ட பிறகு இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி போட்டவர்களுக்கு அனுமதி
அதுமட்டுமின்றி தடுப்பூசி போட்டவர்கள் சினிமா அரங்குகள் மற்றும் உணவகங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும், திருமண அரங்குகள் திறக்கப்படும், மேலும் எச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அந்த மாகாண அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தீவிரமடையும் தடுப்பூசி செலுத்தும் பணி
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி இருப்பு மற்றும் பாதுகாக்கப்படும் முறை குறித்து மாநில அரசுகள் மத்திய அரசு அனுமதியின்றி வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசி
கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஒரே தீர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பெரும்வாரியான மக்கள் தடுப்பூசி செலுத்த முன்வருகின்றனர். தடுப்பூசிகளை ஒட்டு மொத்த மக்களுக்கும் கொண்டு சேர்க்க துரிதமாக செயல்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470