அணு ஆயுதம் பயன்படுத்தும் பாக்: அதிரடியில் இந்தியா- பேரழிவு நிச்சயம்.!
இந்நிலையில், பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்த முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பிலும் தக்கபதிலடி கொடுக்கவும், இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களையும் பயன்படுத்த முடிவு செ
இந்தியா-பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருகின்றது. இந்தியாவின் போர் விமானத்தை காஷ்மீர் பகுதியில் இன்று பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. மேலும், பாகிஸ்தான் எப்-16 ரக போர் விமானத்தையும் இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்த முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பிலும் தக்கபதிலடி கொடுக்கவும், இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது:
இன்று காலையில் இந்தியா எல்லையிக்கு நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தின் எப்-16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. விமானி பாகிஸ்தானுக்கு பைலட் உதவியுடன் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக் 21 சுட்டு வீழ்த்தப்பட்டது:
இதனிடையே இந்தியாவை சேர்ந்த போர் விமானமான மிக் 21 விமானத்தை பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் சுட்டு வீழ்த்தியது. இதில் சென்னையை சேர்ந்த விமானி அபினந்தன். நான் விமானப்படை விங் கமாண்டர் அதிகாரி. என்னுடைய பணி அடையாள (service No) எண்: 27 981 என அந்நபர் கூறும் வீடியோ மற்றும் அவரது புகைப்படங்களை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இரு நாடுகளிலும் பதற்றம்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையே உள்ள விமான போக்குவரத்துதற்போது அடியோடு முடங்கியுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள 14 விமான நிலையங்களிலும் விமான போக்குவரத்து அடியோ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இம்ரான்கான் அழைப்பு:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதை அடுத்து, அணு ஆயுத பிரயோகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கும் ஆணையத்தின் கூட்டத்திற்கு பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.

அணு ஆயுதம் பயன்படுத்தும் பாக் :
பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் பாகிஸ்தானின் தேசிய அணுசக்தி ஆணையத்தின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவும் அணு ஆயுத தாக்குதல் நடத்தும்:
இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், இந்தியா திரும்பி தான் வைத்திருக்கும் அணு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தும் என்று கூறப்பட்டு வருகின்றது. மேலும், இந்தியா மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில் இந்தியா அணு ஆயுதங்களை கொண்டு தாக்கும்.

பேரழிவு ஏற்படும்:
இரு நாடுகளும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கி கொண்டால், இரு நாட்டிலும் உயிரிழப்பு கண்டிப்பாக ஏற்படும். மேலும், இதனால் ஏராளமான இழப்புகளும் இரு நாட்டிற்கும் ஏற்படும்.


Click it and Unblock the Notifications