பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.
டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளில் பிரதானமாக இருப்பது கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்டவையாகும். ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து வருகிறது.

அதிலும் கூகுள் பே செயலி தற்போது பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் செயலியாகும். பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவதுபோன்ற பல்வேறு பயன்பாடுகள் இந்த செயலியில் உள்ளது. இந்த செயலியில் பணம் அனுப்பும் போது கிஃப்ட்கார்டுகள் வழங்கப்படுகிறது. இதில் கிடைக்கும் ரொக்க பரிசுகள் அதில் இருக்கும் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

அதேபோல் பேடிஎம் பயன்பாடு பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து வருகிறது. இதில் உள்ள வாலட் சேவை பல்வேறு தேவைகளுக்கு பயனளிக்கிறது. இதிலும் பணம் அனுப்பும் தேர்வு இருக்கிறது என்றாலும் அதையும் தாண்டி பேடிஎம் சிறிய வங்கியை போல் பல சேவைகளை
கொண்டு இயங்குகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளும், அதற்கு பயன்படுத்தப்படும் மூன்றாம் தரப்பு பேமெண்ட் ஆப்களும் சரிவர இயங்காது என்று இந்திய தேசிய கட்டணக் கழகம் ((NPCI) அறிவித்துள்ளது.

இப்போது பெரும்பாலான மக்கள் வங்கி செல்வதை தவிர்த்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும், கூகுள் பே, பேடிஎம் மற்றும் ஃபோன்பே போன்ற ஆப்கள் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர்.

இப்போது வெளிவந்த தகவலின் தேசிய கட்டணக் கழகம் (NPCI), அதன் டிஜிட்டல் கட்டண தளத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. எனவே இந்த மேம்படுத்துதலில் முக்கியமாக UPI கேட்வே வழியாக BHIM அல்லது மூன்றாம் தரப்பு பேமெண்ட் ஆப்களான பேடிஎம்,போன் பே, கூகுள் பே வழியாக குறிப்பிட்ட நேரத்திற்கு இடையில் பரிவர்த்தனை செய்யும் யூசர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும் எனத்தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த சில நாட்களுக்கு மட்டும் IST நேரப்படி காலை 1 மணி முதல் வரை 3 மணி வரை பரிவர்த்தனைகள் இயங்காது எனவும், அது எத்தனை நாட்கள் நடைபெறும் என சரியான நாட்கள் NPCI குறிப்பிடவில்லை. அதேபோல் இந்த அறிவிப்பு குறித்து சமூகவலைத்தளமான ட்விட்டரில் ட்விட் செய்துள்ளது NPCI அமைப்பு.


Click it and Unblock the Notifications