சென்னையிலும் பிக்பாஸ்கெட் ஆன்லைன் மளிகை கடை துவங்கப்பட்டது
ஆன்லைன் மூலம் மளிகை வியாரத்தை மேற்கொண்டு வந்த பிக் பாஸ்கெட்.காம் தனது விற்பனையை சென்னையிலும் துவங்கியது.

ஆன்லைன் மூலம் சுத்தமான பழங்கள், காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் வாங்க முடியும் என பிக்பாஸ்கெட் நிறுவனத்தை நிறுவிய ஹரி மேனன் தெரிவித்தார்.
பிக்பாஸ்கெட்.காம் இந்தியாவில் ஐந்தாவது நகரமாக சென்னையில் விற்பனையை நீட்டித்துள்ளது, சென்னை இல்லாமல் பெங்களூரு, மும்பை, ஹைத்ராபாத் மற்றும் பூனே போன்ற நகரங்களில் இந்த தளமானது விற்பனையை மேற்கொண்டு வருகின்றது.

நாள் ஒண்றைக்கு 8,000 ஆர்டர்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், வரும் ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு 12,000 ஆர்டர்கள் வரை உயர வாய்ப்பு இருப்பதாக மேனன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications